ஐ.பி.எல். – சென்னை அணி சாம்பியன்

chenai_super.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள்  எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.  அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள்  எடுத்தார். நாயர் 26 பந்துகளில் 27 ஓட்டங்களும் ராயுடு 14 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பொல்லார்டு அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 3 பவுண்டரிஇ 2 சிக்சர்களுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *