இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த நேற்று யாழ்ப்பாணத்தில் இந்திய விசா விண்ணப்ப நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
2008 பெப்ரவரி மாதத்திலிருந்து இந்திய விசா விண்ணப்ப நிலையத்தைக் கொழும்பில் வெற்றிகரமாக நடத்திவரும் குளோபல் நிறுவனத்தினரே இதையும் நடத்துவர்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் இந்த நிலையமானது நீண்ட தூரம் கொழும்புக்குப் பிரயாணம் செய்து இந்திய விசா விண்ணப்பங்களைக் கையளிக்கும் யாழ்ப்பாணத்திலும் மற்றும் அயல் பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பேருதவியாகவிருக்கும் எனக் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஆரம்பிக்கப்படும் இந்த வசதிக்கமைய விசா விண்ணப்பதாரர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள விசா நிலையத்தில் தங்கள் விண்ணப்பங்களைப் பாரம் கொடுத்து மீண்டும் அந்த நிலையத்திலேயே தங்கள் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
இல. 8 பிறவுண் றோட் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் திங்கள் முதல் வெள்ளிவரை 8.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.
இணையத்தளம் www.vfs-in-lk.com ஊடாக விண்ணப்பப் பத்திரங்கள் மற்றும் விசா சம்பந்தமான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளலாம். விசா சம்பந்தமான விசாரணைகளை info.inlk@vfshelpline.com என்ற மின் அஞ்சல் மூலம் பெறலாம்.
IVAC யின் துணைபுரி தொலைபேசி 011-4505588.