யாழ் குடாநாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த மாநாடு நீதிபதி விக்னராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

Judge_R_T_Vignarajaயாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுத்து, சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போதுள்ள நிலை பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் விக்னராஜா தலைமையில் மாநாடு ஒன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் நிதிமன்றக் கட்டடத்தொகுதயில் நடைபெற்ற இம்மாநாட்டில் குடாநாட்டில் பணியாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வடமாகாணப் பிரதி பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. சட்டம், ஒழங்குமீறல்களுக்கெதிராக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.  பொதுமக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *