7.4 ரிச்டர் பூமியதிர்ச்சி இந்தோனேஷியாவை தாக்கியது – இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் நேற்று (9) காலை 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

அஷே மாகாணத்தின் தலைநகரான பண்டா அஷேக்கு 21 கிலோ மீட்டர் தூரத்தில் 61.4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் பூமியதிர்ச்சியின் மையத்துக்கு கிட்டிய நகரமான மீலாபோவில் 7.9 அங்குல (20 சென்றி மீட்டர்) உயரத்துக்கான சுனாமி அலை மட்டுமே ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப் பட்டது. இதனால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்களும் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *