ஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு; ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்

hajj.jpgஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு களைக் கவனிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோரே இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.

ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பெளஸி நேற்று (10) சவூதி அரேபியா பயணமானார். ஏனைய நால்வரும் இன்று (11) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *