20-20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை – பிரித்தானிய அணிகள் மோதல்

sri-lanka.jpgமேற்கிந்திய தீவுகளின் நடைபெற்றுவரும் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன. மிகவும் விறுவிறுப்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்இகம்பீர் இருவரும் களம் இறங்கினர்.கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13 ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .  பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டில்சான்33, சங்கக்கார46 ,  மத்தியூஸ்46, கப்புகெதர37, ஓட்டங்களை பெற்றனர். உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா இபதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவுட‌ன் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவு அ‌ணி தோல்வி கண்டதால் மேற்கிந்திய தீவு அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  இப்போட்டியில் பூவா தலையா வென்று முதலில் துடுப்பாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது.

கூடிய ஓட்டமாக சர்வான் 31 பந்துகளில் 26 ஓட்டங்களையும், சந்திரபோல் 18 ப‌ந்‌துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றனர்.  அ‌ணி‌த் தலைவ‌ர் கெ‌ய்‌ல் 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவுஸ்திரேலியா தர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ர் தலா 2 வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் முதலாட்டம் விருவிருப்பாக நடைபெறுமென கிரிக்கட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை அவுஸ்திரேலியா அணியும் பாக்கிஸ்தான் அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *