வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம்; இடியுடன் கடும் மழை தொடரும்; மக்களுக்கு எச்சரிக்கை!

9colombo.jpgதிருகோண மலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரன தெரிவித்தார்.

இந்தத் தாழமுக்கத்தினதும், தென்மேல் பருவ பெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

இக்காலப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் அதிக மழை காரணமான பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி நிட்டம்புவவில் 313.6 மி.மீ, மக்காவிட்ட 223.5 மி.மீ, ஹங்வெல்ல 210 மி.மீ, கலட்டுவாவ 219.5 மி.மீ, குக்குலேகங்கை 188 மி.மீ, அவிசாவளை 157 மி.மீ. என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுற்ற 6 மணி நேர மழைவீழ்ச்சி பதிவுப்படி இரத்த மலானையில் 169.5 மி.மீ. கொழும்பில் 126 மி.மீ. என்றபடி மழை பெய்துள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *