முசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு – 2 பாடசாலைகள் தரைமட்டம்

rain.jpgமன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.

கூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.

முசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *