கிளிநொச்சியில் கண்டாவளை, கரைச்சி பிரதேச மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

வவுனியா ‘மெனிக்பாம்’ நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 62.810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350 பேர் எதிர்வரும் 11 நாட்களில் அவர்களின் சொந்த ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும், கண்டாவளை முதலான பிரதேச மக்களே இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். நேற்று 20ஆம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கை 31ஆம் திகதி வரை நடைபெறும் என இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான  இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 ‘மெனிக்பாம்’ முகாமில் 11 வரையான நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகையினரே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதனையடுத்து நலன்புரி நலையங்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையும் 55,460 அக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *