Notice: Trying to get property of non-object in /home/u126436249/domains/thesamnet.co.uk/public_html/wp-content/themes/deus/functions/post-info.php on line 57

Warning: ltrim() expects parameter 1 to be string, object given in /home/u126436249/domains/thesamnet.co.uk/public_html/wp-includes/formatting.php on line 4392

Notice: Trying to get property of non-object in /home/u126436249/domains/thesamnet.co.uk/public_html/wp-content/themes/deus/functions/post-info.php on line 57

ஐந்து இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!!!

Lancelot_Roadலண்டன் ஹரோ குழுவிற்கும் லண்டன் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவிற்கும் இடையே 2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கி உள்ளது.

இம்மோதலில் ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, டிஎம்எக்ஸ் குழுவைச் சேர்ந்த வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

தண்டனை விபரம்:
அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : 7 ஆண்டுகள்.
வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : நான்கு ஆண்டுகள்.
ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் :  மூன்று ஆண்டுகள்.
மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : இரண்டரை ஆண்டுகள்.
பார்த்திபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் :  குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவீனம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மே முற்பகுதியில் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களும் அவர்களது தண்டனை விபரமும்:
Sepamallai_Arulmuruganஅருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள். சுpறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Paramalingam_Vakeesanவாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Tharmalingan_Iynkaranஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Satchithananthan_Mathusoothanமதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவினம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • arunn
    arunn

    இவர்களை நாட்டைவிட்டு அனுப்பி விடணும்

    Reply
  • luchcha
    luchcha

    இவர்களில் எவரேனும் டிப்போர்ட் பண்ணுப்படும் வாய்பிருந்தா ரொம்ப நல்லம்.

    Reply