மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்குப் பயணமானார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபாபட்டேல், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப் படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.