நோர்வே இலங்கைத் தூதரக அலுவலர்களும் புலிகள் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலரும் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும் யூன் 10 அன்று மோதிக்கொண்டதாக நேர்வேயில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதலை தனிநபர்களுக்கு இடையேயான மோதலாக நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இணைய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்து உள்ளது.

இலங்கைத் தூதரக அலுவலர்கள் இருவர் புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் உணவகத்திற்குச் சென்று மது அருந்திக் கொண்டிருக்கையில் அங்கு வந்து இன்னும் சில புலி ஆதரவாளர்கள் தூதரக அலுவர்களைத் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நோர்வே பொலிசார் உணவக உரிமையாளரை விசாரித்துள்ளனர். ஆயினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களே 2009 நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் தாக்கியதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *