கிளிநொச்சி சீனித் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முயற்சி!

SugarCaneகிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் கிராமத்தில் இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் காரணமாக இத்தொழிற்சாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இத்தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. முன்னர் இத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை அண்டிய 100 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவையும் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டக்கூடிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *