இரு பெண்களை பாலியல் வல்லறவுக்குட்படுத்திய இராணுவத்தினருக்கு பிணை வழங்க நீதவான் மறுப்பு!

Court_Symbolகிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை  மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *