வடமாகாண நிர்வாக செயலகங்கள் ஓகஸ்ட் 1 முதல் கிளிநொச்சியில் இயங்கும்.

வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண பொது நிர்வாக செயலகமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கிளிநொச்சியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதம செயலாளர் அலுவலகமும், அமைச்சுக்களின் உப பிரிவுகளும், கிளிநொச்சி நகருக்கு மாற்றப்படும் எனவும், வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண அளுநர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் நெறிப்படுத்தலில் வடமாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக கடமையற்றியவருமான தி.இராசநாயகம் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும், அடுத்த மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரிற்கு மாற்றப்படும் எனவும், அதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *