ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் – சீமான் அறிக்கை

seeman.jpgஇலங் கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்தை ஆராயும் ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தமிழர் இயக்கத் தலைவரும் டைரக்டருமான சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழர் இயக்கத்தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, சிறிலங்காவின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களும், வரவேற்றுள்ள போதிலும் பெயரளவில் கம்யூனிசும் பேசும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தியா இது குறித்து கருத்து எதும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கின்றது.

இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு தினந்தோறும் பல்வேறு வகை சான்றுகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதிநவீன ரேடார்கள், உளவு பார்க்கும் கருவிகள், ரோந்துக்கப்பல்கள் உள்பட எண்ணற்ற ஆயுதங்களை தமிழர் களைக் கொன்றொழிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான போரில் தடை செய்யப்பட்ட 500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள கொத்தக்குண்டு மற்றும் ரசாயன ஆயுதங்களை ரஷ்யா இலங்கைக்கு போர் காலத்தில் விற்பனை செய்துள்ளது.

சீனாவோ இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் உலக வங்கியை விட அதிகளவில் சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கி உள்ளது.இப்பொழுது போர் முடிந்த பின்னும் சீனா இலங்கைக்கு 3021 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இது தவிர தனது நாட்டில் கொடும் குற்றம் புரிந்த 25,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகலிடமாக ஈழத்தை சீனா மாற்றிக்கொண்டு வருகின்றது.

இவ்வாறு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு அனுசரணையாக இருக்கும் தைரியத்தில் சர்வ தேசத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் இப்பொழுது விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கின்றது. மேலும் மேலும் இந்த நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு இன்று வரை உதவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு பெற்று வருகின்றது.

இதன் மூலம் இத்தகைய நாடுகள் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு பகிரங்கமாகத் துணைபோகின்றன. இத்தகைய நிலையில் கண் முன்னே நடக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துவதும் அதற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுப்பதும் நம் அனைவரின் கடமை.

ஆகவே முதற் கட்டமாக வரும் ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தெரிவிக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

மாலைமலர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *