சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் பயணித்தவர்கள் வழியில் விபத்துக்குள்ளாகினர். ஒருவர் உயிரிழந்தார்.

வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஹயஸ்’ வான் ஒன்றில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இவர்களின் வாகனம் நேற்றுக்காலை 5.30 மணியளவில் சிலாபம் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.மரியாம்பிள்ளை (வயது 76) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி அந்தோனியம்மா (வயது 66) உட்பட ஏழு பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்த அனைவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *