வங்கி ஊழியர் எனக்கூறி கிளிநொச்சி மக்களிடம் பணம் வசூலித்தவர் பிடிபட்டார்.

வங்கி ஊழியர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தவர் கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் லிங்கேஸ்வரன் என்ற இந்நபர் கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் தம்மை வங்கி ஊழியர் எனக்கூறிக்கொண்டு, போலி ஆவணங்களைக் காட்டி பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நபரிடமிருந்து. 20ஆயிரத்து 800 ரூபா பணம், போலியான வங்கி ஆவணங்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (16-07-2010) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இந்நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.சிவகுமாரன் உத்தரவிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *