தென்னிலங்கையின் மிரிஹானப் பகுதியில் ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. மிரிஹான எத்துல்கோட்ட சந்தியில் (26-07-2010 முற்பகல் 10.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளரால் வங்கிக்கு வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுதராரிகளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஆயததாரிகள் இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.