மீள்குடியேறியோருக்கு 81 ஆயிரம் தென்னங் கன்றுகள்

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட திடடத்தின்கீழ் இந்த வருடத்தில் 81 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை கூறியது. 5 வருட காலத்தினுள் ஒரு வீட்டுக்கு 3 தென்னங்கன்று வீதம் வட பகுதிக்கு ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 50 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிறிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 37 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே தென்னை மரங்கள் எஞ்சியுள்ளன. எனவே வடக்கில் துரிதமாக தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்காக 9 ஆயிரம் தென்னங்கன்றுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *