தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்

mos.jpgதேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள்இன்று 2ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றன. இந்த மாதத்தின் நான்கு தினங்களை அரசாங்கம் தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைமையில் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டம் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்திலும், கிராம சேவகர் மட்டத்திலும் அரச, தனியார் நிறுவனங்களிலும் முன்னெடுக்கப் படவுள்ளது. இப்பணியில் கிராம சேவகர் மட்டத்தில் அமைக்கப்பட்டி ருக்கும் 16,500 குழுக்கள் ஈடுபடவுள் ளன.

அரசாங்கம் இம்மாதத்தின் 2ம், 9ம், 21ம் , 28ம் ஆகிய நான்கு தினங்களையும் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகவும் 16ம் திகதி முதல் 22 வரையான தினங்களை டெங்கு ஒழிப்பு வாரமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்குநோய் காரணமாக இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களி லும் 171 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் 23145 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிர மாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *