கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வீடமைப்பு உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அக்காணி உரிமையாளர்கள் வீடமைப்பு உதவிகளைப் பெறமுடியாத நிலை எற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3290 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், காணி உரிமம் இல்லாத காரணத்தினால், 2466 பேருக்கு உதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மான திட்டமான ‘நேர்ப்’ திட்டத்தின் கீழ் வீடமைப்பு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ‘நேர்ப்’ திட்டத்தின் பிரதித் திட்டப் பணிப்பாளர் கந்தையா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு காணி உறுதி வழங்கப்படாமையினால் வங்கிகளில் கூட வீடமைப்பு கடன்களைப் பெறமுடியாத நிலை மக்களுக்கு எற்பட்டுள்ளது. பலருக்கு தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அநேகமான காணிகளில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *