படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம்

kattankudy.jpgகாத்தான்குடி பள்ளிவாசல்களில் கடந்த 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல், குஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் புனித இஸாத்தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 325பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் 20 ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *