சோமாலிய கொள்ளையரால் பனாமா கப்பல் கடத்தல்- இலங்கையரும் இருப்பதாகத் தகவல்

இலங்கை யர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை நேற்று பிற்பகல் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பனாமா கொடியைதாங்கிய எம்.வி.சுயஸ் எனும் இக்கப்பல், சோமாலிய கடற் கொள்ளையர்களின் ஆயுதத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சில நிமிடங்களின் பின்னர் அக்கப்பலுக்குள் கடற் கொள்ளையர்கள் ஏறியதாகவும் அவ்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலின் பின்னர் அக்கப்பலுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் ஐரோப்பிய யூனியன் கடற்படை தெரிவித்துள்ளது. 17300 தொன் எடையுள்ள அக்கப்பலில் இலங்கை, இந்திய, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளனர். இக்கப்பல் சீமெந்து பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

அக்கப்பல் தாக்கப்பட்ட போது சர்வதேச ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட பகுதிக் கூடாக பயணம் செய்து கொண்டிருந்தது. தாக்குதல் பற்றிய முதல் தகவல் கிடைத்தவுடன் ஹெலிகொப்டர் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிய போதிலும் கடற்கொள்ளையர்கள் ஏற்கெனவே கப்பலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. நிலைமையை அவதானித்து வருவதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *