ஹட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிப்பு கடத்தல் பின்னணியில் வயோதிபப் பெண்

ஹட்டன் ரியல்தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த போது கடத்தப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் கம்பளை சிங்காவத்த பகுதியில் சிறுசிறு காயங்களுடன் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் ஹட்டன் ரியல் தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் மாணவிகள் இருவரும் பாடசாலை செல்வதற்காக காத்து நின்றனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் நின்ற வயோதிப மாது ஒருவர் மயங்கி விழுவது போன்ற பாசாங்கு காட்டியுள்ளார்.இதனை உண்மையென நம்பிய இரு மாணவிகளும் அந்த பெண்ணை தாங்கிப் பிடித்தவுடன் வானில் வந்த சிலர் அந்தப் பெண்ணுடன் சேர்த்து இரண்டு மாணவிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

வானில் ஏற்றிய சில நிமிடங்களிலேயே மாணவிகள் மயக்க முற்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். கம்பளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு மாணவிகளுள் ஒருவரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *