மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமித்தால் அரசியலை துறக்கத் தயார் – சவால் விடுக்கிறார் பிரபா கணேசன்

mano.jpgஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமிக்க முன்வந்தால் தான் அரசியலை விட்டு வெளியேறுவதாக பிரபா கணேசன் எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

மனோ கணேசனின் சகோதரரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கடந்த வாரம் எதிரணியிலிருந்து அரச தரப்புக்கு மாறியிருந்தார். தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால் (மனோ கணேசனுக்கு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவி) இதனைச் செய்ய முடியாதென்பதை

 தாம் அறிவாரென்று இணையத்தளச் செய்திச்சேவையொன்றுக்கு பிரபா கணேசன் நேற்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சி ஐந்தில் நான்கு பேருடன் சிறு சிறு துண்டுகளாகி தலைமைத்துவத்திற்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் எதனையும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட ஐ.தே.க. உறுப்பினர் உட்பட ஐந்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் ஏற்கனவே கலந்துரையாடியிருப்பதாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது தொடர்பான தனது தீர்மானத்தில் மாற்றமில்லையெனவும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்தோருக்கு தான் சேவை செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திலிருந்து அவர்களுக்கு தன்னால் சேவையாற்ற முடியும் என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் எதிரணிக்கு திரும்பிச் செல்லப்போவதாகத் தெரிவிக்கப்படும் வதந்திகளில் உண்மை கிடையாதெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *