றுகுணு பல்கலை. மாணவன் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய தனிநபர் ஆணைக்குழு

றுகுணு பல்கலைக்கழக மாணவர் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பான உண்மை நிலைகளைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனிநபர் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜகத் பாலபட்டபெந்தி  இதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி பதுளையில் வைத்து மரணமான இந்த மாணவனின் மரணம் தொடர்பில் முரண்பட்ட முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருவதால் அவற்றை விசாரித்து சிபாரிசு அறிக்கையொன்றை தயாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் தொடர்பிலும் முரண்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து முழுமையான அறிக்கையை மூன்று மாத காலத்துக்குள் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மேற்படி ஆணைக்குழுவுக்குப் பணித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *