திரிகோண கிரிக்கெட் தொடர்; இந்தியா, நியுஸிலாந்து இன்று மோதல்

india.jpgஇந்திய அணி அடுத்து 3 நாடுகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி இன்று 10ந் திகதி தொடங்குகிறது. 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. 3வது நாடாக நியூசிலாந்து கலந்துகொள்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான டெண்டுல்கருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற டிராவிட், லட்சுமண், விஜய், அமித் மிஸ்ரா, முனாப் பட்டேல் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். ரவிந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், வீரட் கோக்லி, பிரவின் குமார், நெஹ்ரா, ரோஹித் சர்மா, திவாரி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். காயம் காரணமாக காம்பீர் 3 நாடுகள் போட்டியில் ஆடவில்லை.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றதால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. ஷெவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்குரோஸ் டெய்லர் கப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முன்னணி துடுப்பாட்ட வீரர் ரைடர் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகின்றது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), சுரேஷ் ரெய்னா, வீரட் கோக்லி, யுவராஜ்சிங், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவீந்தர ஜடேஜா, ஆர். அஸ்வின், திவாரி, ஆசிஷ் நெஹ்ரா, ஓஜா, இஷாந்த் சர்மா, பிரவீன்குமார், அபிமன்யூ மிதுன்.

நியூசிலாந்து: ரோஸ் டெய்லர் (கப்டன்), குப்தில், ஹொப்சின்ஸ், பீட்டர் இகரம், நாதன் மேக்குல்லம், ஜேக்கப் ஓரம், டபி, வாட்லிங், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜித்திதன் படேல், சவுத்தி, மில்ஸ் எல்லியட், மெக்காய.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *