யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை அதிகரிப்பு!

யாழ்.குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தெருக்களிலும் ஆலய சுற்றாடல்களிலும், பேருந்துகளிலும் இவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். தென்பகுதிகளிலிருந்தும் பிச்சைக்காரர்கள்; தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பலர் வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்ளைக் காட்டி பொதுமக்களிடம் பிச்சை கேட்கின்றமையiயும் அவதானிக்க முடிகின்றது.  முன்னர் யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். தற்போது யுத்தம் முடிவடைந்து பாதைகள் திறக்கப்பட்ட பின்னர் இவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

யாழ். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ள போதும் பிச்சைக்காரர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்றமை குறிப்படத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • PALLI
    PALLI

    புலம்பெயர் தேசத்திலை நாமும் அதைதான் செய்கிறோம் என பல்லி சொன்னால் சண்டைக்கு வருவார்கள்? ஆனாலும் அதிலும் உன்மை இருக்கதான் செய்கிறது;;;

    Reply