யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் வடமராட்சியில் மயங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை மீட்கப்பட்ட இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் கூக்குரல் கேட்டதாகவும் பயம் காரணமாக எவரும் அப்பகுதிக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் இப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் எதற்காக துன்னாலைப் பகுதிக்குச் சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? என்பன குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *