வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடபகுதி நடனக் கலைஞர்களுக்கு சென்னையில் குறுங்கால நடனப் பயிற்சி.

வடமாகாணத்திலுள்ள இளம் நடனக் கலைஞர்களுக்கு தென்னிந்தியாவில் குறுங்கால நடனப் பயிற்சி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பயிற்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் நடைபெறும் எனவும், இதற்காக 1.6 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கொண்டுள்ளார். வடக்கில் வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடன நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இப்பயிற்சி நடைபெறுவள்ளதாகவும், இதற்கென 16 ஆண், பெண் நடனக்கலைஞர்கள் வடக்கிலிருந்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும், விரைவில் அவர்கள் சென்னைக்குப் பயணமாகவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • PALLI
    PALLI

    வாழ்க வளர்க்க;
    இது ஒன்றும் அசின் அக்காவின் ஏற்பாடு இல்லையே;
    இருந்தாலும் தப்பில்லதானே,

    Reply