நாளை மடுமாதா ஆலயத் திருவிழா

madu.jpgகத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மருதமடு மாதா ஆலயத்தின் ஆகஸ்ட் விண்ணேற்புத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை தமிழ், சிங்கள, இலத்தீன் மொழிகளில் மன்னார் ஆயர் அதி.வணஇராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆறு ஆயர்கள் இணைந்து ஒப்புக்கொடுப்பார்கள். அதனையடுத்து அன்னையின் திருச்சொரூப பவனியும் வழிபாடும் ஆசீரும் வழமை போல நடைபெறும்.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு, பவனி, ஆசீர் நடைபெறும். இம்முறை வழமையைவிட பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் மடுத்÷தவாலயத்தைச் சூழவுள்ள காட்டுப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கியுள்ளனர்.

குடிநீர் மற்றும் பாவனைக்குரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்படாது எச்சரிக்கை குறியீடுகள் காணப்படும் இடங்களில் மக்களை நடமாடவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *