கடல்சூரியன் கப்பலுக்குள் கனடா படை பிரவேசம் – 490 பேர் இருப்பதாக கனடா அறிவிப்பு

son-k.jpgஇலங்கை அகதிகள் இருக்கலாமென நம்பப்படும் ‘கடல்சூரியன்  கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனடா செய்திச் சேவை அறிவித்துள்ளது. 490 தமிழர்களுடன் கடல்சூரியன் கப்பலை இடைமறித்துள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை விக்டோரியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சி.எப்.பி.எஸ்கியூமோட்டுக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றிருப்பதாக கனடிய குளோப் அன்ட் மெயில் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

500 இலங்கையர் இருக்கலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த போதும், 490 பேரே கப்பலினுள் இருப்பதாக கனடிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்ரோவ்ஸ் அறிவித்துள்ளார். என்றாலும், இவர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாமென நம்புவதாகவும் அவர் கூறினார். “இவர்கள் மீதும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கனடா கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த அகதிகள் விடயத்தில் கனடா என்ன நடவடிக்கை எடுக்கிறதென்பதை மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கையைப் பொறுத்து மனிதக் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடலாமா? இல்லையா? என்பது தான் அவர்களது அங்கலாய்ப்பாக இருக்கிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேற்படி கடல்சூரியன் கப்பல் விடயம் தொடர்பாக அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக கனடிய அரசுடன் பேசி வருகிறோம். அவதானித்தும் வருகிறோம். ஏதும் அவசரமான நிலை ஏற்படுமாக இருந்தால் அமெரிக்கா பொருத்தமான முறையில் பதிலளிக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் நிகோல் தோம்ஸ்சன் தெரிவித்தார்.

கனேடிய வன்கூவர் சன் செய்திச் சேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  எனினும், யாரென்ற விடயம் வெளி யாகவில்லை. அதேவேளை, கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கடல்சூரியன் கப்பலை எச்.எம்.சி.எஸ்.வின்னிபஹ் கப்பலே இடைமறித்திருக்கிறது. வின்னிபெஹ் பலதடவைகள் கடல்சூரியனுடன் தொடர்புகொள்ள முயற்சித்தது. தொடர்பாடல்களை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் கப்பலில் அகதிகள் இருப்பதாக கடல்சூரியன் அறிவித்தது என்று அவர் கூறியுள்ளார்.  கப்பலானது எஸ்கியூமோட் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுமென்பதை கனடாவின் போக்குவரத்துத்துறை உறுதி செய்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *