வன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் சில வருடங்கள் பின்தங்கியுள்ளதாக மாகாண கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு வருடங்களில் மட்டும் யுத்தம் காரணமாக 36 ஆயிரம் மாணவர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக வடமாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது. யுத்த காலங்களில கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாலும், மாணவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த காரணத்தினாலும் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamபாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என வடமாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 தற்போது மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், சுமார் நான்காயிரம் மாணவர்கள் இன்னமும் முகாம்களிலேயே வசிக்கின்றனர் என்பதும், மக்கள் மீள்குடியேற்றபட்ட வன்னிப் பகுதிகளின் பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள போதும் அப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *