கட்சி ஆதரவாளர் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் விசாரணை

sajith-premadasa.jpgகட்சி ஆதரவாளர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கட்சித் தலைமையகத்திற்கு முன்னால் றியன்சீ அல்கம என்ற கட்சியின் ஆதரவாளர் தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

மிரிஹான பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து சஜித் பிரேமதாஸவிடம் மிரிஹான பொலிஸார் ஒன்றரை மணித்தியாலம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *