உள்ளூர் தயாரிப்பு பி.ரி.ஐ.பக்றீரியாவை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்

images.jpgஉள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை நேற்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெளியிடவிருந்த போதும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதனை வெளியிடுவதாக இருந்தபோதும் அது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார பிரதியமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த பக்றீரியாவானது ஏதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாகவும் பிரதியமைச்சர்
அமரவீர கூறியுள்ளார். அவர்கள் பூரண அறிக்கையொன்றை சமர்ப்பித்த பின்னரே பி.ரி.ஐ. பக்றீரியாவை வெளியிடமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பை அழிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை கொழும்பில் மூன்று இடங்களில் நேற்று வெளியிடத்திட்டமிடப்பட்டிருந்தது.நாளை புதன்கிழமையும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *