முகாம்களிலுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு ஆயர்கள் குழு ஜனாதிபதியிடம் வலியுத்தல்.

Bishops_Meet_PresidentMRஇன்னும் அகதி முகாம்களில் தங்கியுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மீள்குடியமர்த்தபட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை தாமதமின்றி வழங்குவது குறித்தும் இக்குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Bishops_Meet_PresidentMRகொழும்பில் நடைபெறும் ஆயர்களின் வருடாந்தக் கூட்டத்திற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்து ஒன்று கூடியிருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீள்குடியமாத்தப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டுக்களையும் இக்குழவினர் தெரிவித்தனர். இன்னுமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல், மீள்குடியமத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளல், சிறுவர்கள் பாடசாலை மாணவர்களின் நலன்களை பேணுதல் என்பன தொடர்பாகவும் உரையாடப்பட்டதோடு, ஆயர்கள் குழவினர் வருடக்கணக்காக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *