மன்னார் மாவட்ட மக்களுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நடமாடும் சேவையொன்றை உடனடியாக நடத்துமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னார் அரசாங்க அதிபர் நிக்கிலஸ்பிள்ளைக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ளோர் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்பு – இறப்பு மற்றும் தனிப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்றி பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால் அவர்கள் ஒரே கூரையின் கீழ் இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவில் நடமாடும் சேவையொன்றை நடத்துமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.