அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 2 தமிழர்கள் மேன்முறையீடு

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இரு தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக இருப்பதற்கான தமது கோரிக்கையை கையாண்ட விதம் நீதியற்றது எனத் தெரிவித்து அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமது புகலிடக் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் 2009 அக்டோபரில் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடைய புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக குடிவரவுத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதனால் அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலைமையை எதிர்கொண்டிருந்தனர். எம்61, எம்69 என்று மட்டுமே இந்த இருவரும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களின் வழக்குகளைத் தனிப்பட்ட முறையில் பரிசீலனைக்கு எடுக்க குடிவரவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாகவும் நடைமுறை ரீதியில் பல குறைபாடுகள் இருந்ததாகவும் அகதிகள் மற்றும் குடிவரவு சட்ட நிலையத்தைச் சேர்ந்த டேவிட் மானே கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *