இந்திய வெளியுறவுச்செயலர் வடபகுதிக்கு விஜயம்.

Nirupama_Raoஇலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய் கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்ரர் மூலம் இப்பகுதிகளுக்கு செல்லும் இவர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பிற்பகல் 2மணிக்கு யாழ்பாணம் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதோடு, பொது நுலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொள்ள வுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியமர்வு, ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *