இந்தியாவினால் 50 ஆயிரம் வீடுகளைக்கட்டும் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றே பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை இந்திய நிறவனம் ஒன்றே பொறுப்பேற்று அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா வடக்கில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான நிதி நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பது தொடர்பான சாச்சைசகள் இந்திய அரசியல் வட்டாரங்களிலிருந்தும் தமிழக வட்டாரங்களிலிருந்தும் வெளியாகியிருந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வீடமைப்பு குறித்து ஆராய குறித்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.   யாழ்ப்பாணத்தில் வீடுகள் அமைக்கவிருக்கும் இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் ஆயிரம் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் மேலும் ஆயிரம் வீடுகள் கட்டுவதெனவும்,அடுத்ததாக ஏனைய வீடுகளைக் கட்டம் கட்டமாக கட்டுவதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இவ்வீடமைப்புக்காக இந்தியா வழங்கும் நிதியைக் கையாளவதற்காக இந்திய வங்கியின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *