பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்!

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 10ம் திகதி மேற்படி மருத்துவமனையில் பிறந்த குந்தையை கைவிட்டு விட்டு அதன் தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அக்குழந்தையை அம்மருத்துவமனையின் வைத்தியர்கள். தாதிகள் பராமறித்து வருகின்றனர். இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 வறுமை மற்றும், தவறான உறவுகள் காரணமாக தென்னிலங்கைப் பகுதிகளில், பெற்ற குழந்தைகளை கைவிட்டு விட்டு தலைமறைவாகும் பெண்கள் தொடர்பான செய்திகளை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருந்த நிலையில் தற்போது போரின் பின்னான சூழலில் வன்னியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *