யாழ்ப் பாணத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முதன்முதலாக கலந்து கொண்டுள்ளது. அத்துடன் அனர்த்த செயற்பாட்டு மையத்தையும் ஏனைய அரசு சார்பு அமைச்சர்களுடன் சோந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்துள்ளனர்.
யாழ்.செயலகத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எம் பௌசி ஏற்பாடு செய்த அபிவிருத்திக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு அனர்த்த செயற்பாட்டு மையத்தை அமைச்சர் பௌசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் திறந்து வைத்த போது அதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து கொண்டார்.
இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் நடைபெற்றக் கூட்டங்களில் அரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்த்திக் கூட்டங்களில் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் பின்னர் அரசாங்கத்தின் அபிவிருத்தி, மீள்குடியமர்வுப் பணிகளுக்கு தமது ஆதரவு உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டடில் அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டங்கள் 167 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் என் அமைச்சர் ஏ.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
pandithar
சுடலை ஞானம்!..
ஆனாலும் வரவேற்க வேண்டும்…