”அமெரிக்கா தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல

Keheliya_Rambukwella”அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்nவெல காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 18வது அரசமைப்புத் திருத்தம் நிறைவேறியுள்ளதையடுத்து அமெரிக்கா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இவ்விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற விதத்தில் தலையிடக்கூடாது. தேவையற்ற, பொறுப்பற்ற விதங்களில் விமர்சனங்களை வெளியிடுவதை அது தவிர்த்துகொண்டு தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அமரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. அத்துடன் எமது நாட்டின் அதியுயர் கட்டமைப்பான உயர் நீதிமன்றத்தையும் அது அவமதித்துள்ளது” எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

”இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தம் அதன் தேவை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது சட்டப்படியானது. அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 18வது அரசமைப்புத் திருத்திருத்தத்தைக் கண்டித்து அமெரிக்கா அதன் விமர்சனத்தைத் வெளியிட்டிருந்தது. இவ்வரசமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத் தன்மையினைப் பலவீனப்படுத்தும் என அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *