வீட்டுத்திட்டம் குறித்து ஆராய இந்தியப் பிரதிநிதிகள் குழு யாழ்.விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது. நேற்று மாலை இக்குழுவினர் யாழப்பாணம் வந்து சேர்ந்தனர். இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டம் தொடர்பாக ஆராயவே இக்குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளடங்கிய இக்குழுவினரோடு ஐ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். இக்குழுவினர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள விட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *