”இரத்தினசபாபதி அவர்கள் சிறந்த ஒரு திசை வழி காட்டி!” டக்ளஸ் தேவானந்தா

Ratnasababathy_EROSதோழர் இரத்தினசபாபதி அவர்களின் அனுதாப பிரேரணையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (24) ஆற்றிய உரை.

._._._._._.

துப்பாக்கி வேட்டுக்களை விடவும் சொற்கள் ஒவ்வொன்றும் வலிமையானவை. வெடி குண்டுகளை விடவும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வீரியம் நிறைந்தவைகள்.

அந்த வலிமையான சொற்களுக்கும் வீரியம் நிறைந்த கருத்துக்களுக்கும் சொந்தக்காரரான தோழர் இரத்தினசபாபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் மரியாதை செலுத்துவது குறித்து இந்த நாடாளுமன்றத்திற்கு நான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு காலத்திற்கு காலம் வழி காட்டிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கௌரவ இரட்ணசபாபதி அவர்களின் வழி காட்டல் என்பது தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் மிகவும் காத்திரமான வழி காட்டலை எமக்கு வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை போராட்டமானது புதிய உத்வேகத்தை பெற வேண்டிய ஒரு காலச்சூழலில் அதன் கட்டாயத்தை உணர்ந்து கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் ஆற்றியிருந்த ஆற்றல் மிகு பங்களிப்பு என்பது எமது வரலாற்றில் அழியாத பதிவாக எழுதப்பட்டிருக்கின்றது

அது போலவே மாறி வந்திருந்த எமது மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொண்டவராக உலகத்தின் போக்கையும் அதற்கான நடைமுறை யதார்த்தங்களையும் புரிந்து கொண்டவராக தோழர் இரட்ணா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறை ரீதியாகவே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியிருந்ததும் எமக்கு அவர் மீதான பற்றுதலை மேலும் உருவாக்கியிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை அடுத்து எம்மை போல் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தோழர் இரட்ணா அவர்கள் 40000 மக்களின் விருப்பு வாக்குகளை பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவராக இருந்த போதிலும் அவர் ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு போதும் இருந்தவரல்ல.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்புது அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக இருக்க வேண்டுமே என்று நினைத்தவரே ஒழிய அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கருதியவர் அல்ல�

இலங்கைத்தீவிலும் சரி அதற்கு அப்பால் இருக்கும் அயலுலக அரசியல் சூழலிலும் சரி அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் சரி எதிரிகள் யார்?… நண்பர்கள் யார்?… என்ற தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தவர்.

அதன் காரணமாகவே அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து இன சமூக மக்களின் பக்கமும் அவர் தனது பார்வையை செலுத்தியிருந்தவர்.

மதத்தால் இந்து ஆனாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும், தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தழிழர் ஈழவரே. அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.

இதுவே தோழர் இரட்ணா அவர்களின் கருத்தாகும். இதுவே பரந்து பட்ட மக்கள் நலன் சார்ந்து அவர் சிந்தித்திருந்த அவரது உண்மையுள்ள தத்துவமாகும்.

தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்று அனைத்து மக்கள் சமூகத்தையும் நேசித்திருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அதற்கான தெளிவான கொள்கையினையும் வகுத்து அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தவர்.

எமது உரிமைப்போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதமாக அன்றி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்டதான ஸ்தாபன வடிவமாக உருவாக வேண்டும் என

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Comments

  • திசைகாட்டி
    திசைகாட்டி

    இரட்னா:எம்மினத்தின் திசைகாட்டி

    ஈழப் புரட்சி அமைப்பின் நிறுவனரும்; சிறிலங்காவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்; தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வித்தகனாய் விளங்கியவருமான இளையதம்பி இரட்னசபாபதி அவர்கள் 12.12.2006 இல் இலண்டனில்; தனது 68வது வயதில் காலமான துயரச் செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

    இரட்னா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர்; தமிழ்பேசும் மக்கள் மத்தியில் முன்வைத்த சிந்தனைகளும்; வழிகாட்டல்களும் ஈழப்போராட்டத்திற்கு அத்திவாரமாய் அமைந்துள்ளதை எவரும் அறிவர். காலத்தால் அழியாத அவரது சிந்தனைகளும்; அறிவுறுத்தல்களும் என்றும் நினைவுகூறத்தக்கவை.

    இலங்கை சுதந்திரமடைந்த பின்பு; தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவரால் படிப்படியாக ஒதுக்கப்பட்டும்; விரட்டப்பட்டும் வந்த காலங்களில் நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து இலண்டனில் தஞ்சமடைந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் 70களில்; விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடி இரட்னா ஆவார்.

    அகிம்சைப் போராட்டத்தை மதிக்கத் தவறிய இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதம் தாpத்த போராட்டத்தின் அவசியத்தை ஏற்றுச் செயற்பட்டவர் இரட்னா.

    குறிப்பாக தன்வசம் இருந்த சர்வதேசத் தொடர்புகளைப் பயன்படுத்தி; இலங்கைத் தமிழ் இளைஞர்களை; இலங்கை அரசின் இராணுவக் கெடுபிடிகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில்; அதற்கான பயிற்சிநெறிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதை அனைத்து போராட்ட அமைப்புக்களும் நன்கு அறியும்.

    இக்காலங்களில்; 1975 இல் அவரால் உருவாக்கப்பட்டதே ஈழப் புரட்சி அமைப்பு ஆகும். இவ்வமைப்பை நிறுவிய போது; அதன் முதற் பிரகடனமாக அவர் வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்திலிருந்து அவர்; காட்டிய திசையை நாம் புரிந்துகொள்ளலாம்:

    1. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை என்பது; வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து நோக்கப்படவேண்டிய ஒன்று.

    2. தமிழர்கள் செறிந்து வாழும் இப்பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் பொருளாதார உள்ளகக் கட்டமைப்பொன்றை நிறுவுவதே போராட்ட அமைப்பொன்றின் அடிப்படை வேலைத்திட்டமாய் அமையவேண்டும்.

    3. அவ்வாறு அமையப்பெற்ற பொருளாதார உறவில்; அதனை எதிர்க்கும் எந்த சக்தியையும் ஆயுதம் தாங்கி எதிர்கொள்ள வேண்டும்.

    4.அந்த எதிர்கொள்ளலில் இடம்பெறும் சமநிலையில் அரசியல் தீர்வு நிர்ணயிக்கப்படவேண்டும்.

    இதனடிப்படையில் ஈரோஸ் இயக்கத்தை நெறிப்படுத்திவந்த இரட்ணா அவர்கள் 1983 இல் ஏற்பட்ட பாரிய இனக்கலவரத்தின் விளைவாக; இந்தியத் தலையீடு மேலோங்கிய நிலையில்; பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தீவிரம்பெற்ற நிலையில்; ஐக்கியம் பற்றியும்; ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் குறித்தும் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

    1985 இல் திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஈரோஸ் சார்பாகக் கலந்துகொண்ட இவர்; மலையக மக்களின் வாக்குரிமைக்காக வற்றுபுறுத்தியிருந்தார். இதன் பயனாக திம்புப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற நான்கம்சக் கோரிக்கையில்; மலையக மக்களின் வாக்குரிமையும் அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. இதன் விளைவால் இலங்கையரசு மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்க முன்வந்தது.

    1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு; வடக்கு கிழக்கு எங்கிலும் தமிழ்பேசும் மக்கள் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நெருக்கடி மிகுந்த காலத்தில் இவர் இந்திய இராணுவ வெளியேற்றத்தை கோரிக்கையாக முன்வைத்து 1989 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலை; மக்களின் கருத்தை வெளிப்படுத்த ஒரு கருவியாக பயன்படுத்தியிருந்தார். இத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று; இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தொpவித்ததன் வாயிலாக; வடக்கு கிழக்கில் இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கு அடித்தளம் இட்டிருந்தார்.

    இவர் எமது போராட்டத்தின் அங்கீகாரம் பற்றியும்; சர்வதேச ஆதரவு பற்றியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் சமகால அரசியலுக்கும் ஓர் திசைகாட்டியாக விளங்குகின்றது.

    ஈழப் போராட்டம் என்பது திருகோணமலையை விடுவிப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது என்று சுட்டிக்காட்டிய இரட்னா; அப்பிராந்தியத்தை தக்கவைத்துக்கொள்ளும் போதுதான்; சர்வதேச ஆதரவு என்பது எட்டப்படக் கூடிய விடயமாக அமையும் என கருத்துரைத்திருந்தார். இவர்; சர்வதேச ஆதரவு என்பதை „தார்மீக உதவி“ என்ற வரையறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தியமையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

    தன் கருத்துக்களாலும்; தனிப்பட்ட அணுகுமுறைகளாலும் பகைமையற்ற நிலையை பேணிவந்த இவர்; அனைத்துப் போராட்ட அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி பொது செயற்திட்டத்தின் கீழ் செயற்படவேண்டும் என்ற அவரது அடிப்படை விருப்பு நிறைவேறாத நிலையில் அவர் எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

    ஆயினும்; அவர் முன்வைத்த கருத்துக்களும்; சிந்தனைகளும் எம் இனத்தின் எதிர்காலத்திற்கு தகுந்த வித்தாகும் என்பது திண்ணம். இவர் எம்மத்தியில் இன்று இல்லாவிட்டாலும்; எம்மினத்தின் திசைகாட்டியாய் வாழ்ந்துகொண்டிருப்பார்.

    Reply
  • Ratna Speech
    Ratna Speech

    இலங்கைப் பாராளுமன்றத்தில், ஈழவர் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் பிரவேசத்தின் பின் 21.07.89 அன்று சபையில்
    ஈரோஸ் நிலைப்பாடு பற்றி தோழர் இரத்தினசபாபதி ஆற்றிய உரை பேரன்புமிகு சபாநாயகர் அவர்களே!

    மதிப்புக்குரிய சக பாராளுமன்ற அங்கத்தவர்களே!
    எமது உறுப்பினர்களது சத்திய பிரமாணத்தின் பின்னர் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேசுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக
    முதற்கண் எமது கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த பொதுத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் தற்போது மேற்கொள்ளும் இந்த நாடாளுமன்ற பிரவேசத்தின் நோக்கம் பற்றியும், நாடாளுமன்றத்தில் நாம் மேற்கொள்ள இருக்கும் ஈடுபாட்டின் எல்லை வரையறை பற்றியும் எமது பிரதிநிதித்துவத்தின் வீச்செல்லை பற்றியும் இன்றைய தினத்தில் பேசுவதற்காக நான் எனது கட்சியின் சார்பில் பணிக்கப்பட்டுள்ளேன்.

    அத்துடன் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை மையமிட்டு இலங்கை இந்திய அரசுகள் கடைப்பிடித்து வரும் போக்கு குறித்து எமது கட்சி கொண்டுள்ள நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவும் நான் பணிக்கப்பட்டுள்ளேன். எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்தை தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையுள்ள சபையாக நாம் கருதவில்லை.

    இந்த நாடாளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 225 ஆசனங்களில் ஏறத்தாழ 30 ஆசனங்களே தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதித்துவத்திற்குரிய ஆகக்கூடிய ஆசனங்களாக மட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

    இந்த வகையில் பார்க்கும்போது 8:1 என்ற விகிதத்தில் விளங்கும் விகதாசாரத்தை வைத்துக்கொண்டு சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானம் இயற்றும் வழிமுறையுடைய இச்சபையில் தமிழ்த்தேசிய இனமானது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தீர்மானம் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் உடையதாக இங்கு இருக்கு முடியாது. இனப்பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள சூழ்நிலையில் அதனைத் தீர்ப்பதற்கு எந்தப் பொறிமுறையும் இந்த நாடாளுமன்றத்தில் இல்லாத காரணத்தினாலேயே இச்சபையை நாம் ஆற்றலற்ற சபையாகக் கருத வேண்டியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே நாடு முழுவதிலும் இராணுவச் சூழ்நிலை நிலவும்போது நாடாளுமன்றத்திற்குள் மட்டும் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க முயல்வது பொருத்தமற்ற செயலாகக் காணப்படுவதாலும் நாம் இந்த நாடாளுமன்றம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையற்றதென்ற முடிவுக்கே வந்துள்ளோம்.

    ஆயினும் இந்தச் சபையின் பிரதிநிதித்துவத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரமும் மக்கள் வழங்கும் அந்தஸ்தும் இன்னமும்
    இருப்பதனாலேயே இச்சபையில் நாம் பிரதிநிதிகளாக அங்கத்துவம் பெற முன்வந்துள்ளோம்.

    எம்மைப் பொறுத்தவரை இது ஒரு பிரசார மேடையே – நாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளையும் அதற்காக நாம் முன்வைத்துச் செயற்படும் தீர்வுகளையும் இங்கு நாம் அவசியம் ஏற்படும்போது எடுத்துச் சொல்வோம்.

    இந்த அவையின் அமர்வுகளில் கலந்துகொள்வது குறித்து நாம் சில எல்லை வரையறைகளை கொண்டுள்ளோம். வடககு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவர்களது அபிலாசைகளையும் இங்கு நாம் பிரதிபலிப்போம்.

    அத்துடன் தேசிய ரீதியில் எழும் விடயங்களில் பிரச்சினைகளின் தன்மை கருதியே நாம் ஈடுபாடு கொள்வோம் – சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இங்கு எழும் விவாதங்களில் அணிசேராக் கொள்கையை அனுசரித்தே எமது பங்களிப்பானது அமையப் பெறும். மேலும் இந்த அவையில் மூன்றாவது பெரும்பான்மை பலத்தில் இருக்கும் நாம் எந்த அணியையும் சார்ந்து நிற்கப் போவதில்லை என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இவையே எமது நாடாளுமன்ற ஈடுபாட்டின் எல்லை வரையறை பற்றி எமது கட்சி கொண்டுள்ள தீர்மானங்களாகும்.

    ஈழவர் ஜனநாயக முன்னணியின் அங்கத்தவர்களாக விளங்கும் 13 சுயேட்சை உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்த மக்களின் சார்பாக இங்கு குரல் எழுப்புவார்கள்.

    இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
    இலங்கை வாழ் மக்களுக்கு வாக்குரிமை கிடைக்கப் பெற்ற முதலாவது பொதுதத் தேர்தல் நடைபெற்றபோது மலையகத்தில் இருந்து 7 பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

    ஆனால் பிரஜாவுரிமைச் சட்டம் 1948-இல் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 10 இலட்சம் மலையக மக்கள் வாக்குரிமை இழந்ததன் விளைவாக கூடுதலாக நியமன உறுப்பினர்களே மலையக மக்களின் சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.

    இம்மக்களுக்கு மீண்டும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற 1989 பொதுத்தேர்தலில் ஒரு உறுப்பினர் தானும் மலையகத்தில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மலையக மக்களின் ஏகப் பிரதிநிதியாக வர்ணிக்கப்படும் அமைச்சர் தொண்டமான் கூட தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டவரே.தமிழ் பேசும் மக்களின் ஒரு சாராரான மலையக மக்களுக்கு நேர்ந்துள்ள நிர்க்கதியை கருத்தில் கொண்டு எமது பிரதிநிதித்துவத்தில் மலையகம் சார்பான பிரதிநிதித்துவம் இடம்பெற்றுள்ளது.

    1989 பொதுத் தேர்தல் வழங்கிய பிரதிநிதித்துவத்தின் இன்னொரு அம்சத்தையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்.

    கடந்த 1977 பொதுத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பலம் பெற்று இந் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கிய த.ஐ.வி. கூட்டணியானது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இப்பொதுத்தேர்தலில் ஒரு ஆசனங்களைக்கூடப் பெற முடியாது போக முற்றிலும் புதிய முகங்கள் இந்த அவைக்கு வந்துள்ளனர்.

    ஒரு தசாப்த காலத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இருந்து பழையன கழிதலும், புதியன புகுதலுமான நிலை ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவமானது ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து உருவானது என்பதையும், இன்னமும் இந்தப் புலத்தையே சார்ந்துள்ளதென்பதையும் இங்கு பிரத்தியேகமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

    இவற்றின் அடிப்படையில் இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த அவையின் விவாதப் பொருளாக உள்ள அவசரகால நிலைமை சம்பந்தமாகவும் எமது அரசியல் நிலைப்பாடு குறித்தான விடயத்திற்கும் வருகிறேன்.

    இன்றைய இந்த அவசரகால விதிகளைப் பார்க்கும்போது 1979 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக் கில் அமுலாகிய இதே வகை சட்டங்கள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இராணுவத் துறையினரைத் தட்டிக் கேட்க முடியாதபடி முழு அளவில் வழங்கப்படும் அதிகாரங்களின் தொகுப்பே இச்சட்டங்களாகும்.

    ஏறத்தாழ 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் பிரயோகித்து வரும் இச்சட்டங்களால் அரசுக்கும் இப்பகுதிக்கும் இடையிலான உறவு
    விரிசல் அடைந்து போனதைத் தவிர வேறெதையும் இவை சாதிக்கவில்லை.

    இவ்வகைச் சட்டங்களின் பாதிப்புகளில் இருந்தே நாம் உருவாகியவர்கள் என்ற வகையில் இவற்றுpன் மோசமான விளைவுகள் பற்றிப் பேசுவதற்கு நாம் போதிய அனுபவம் பெற்றவர்களாகியுள்ளோம். இவ்வகை விதிமுறைகள் வடக்கு கிழக்கு நிலைமைகளைப் போல் தென்பகுதி நிலைமைகளையும் மோசமான நிலைக்கு இட்டு வந்துவிடுமென எச்சரிக்கை செய்கிறோம்.

    கடந்த காலங்களில் நடந்ததைப்போல் இளைஞர்கள் துப்பாக்கி தாங்கிப் போராட்டம் நடத்துவதை வெறும் கிளர்ச்சியென குறுகிய எல்லைக்குள் எடை போட்டு கிளர்ச்சி அடக்கும் பணிகளுக்காக முப்படைகளையும் முடுக்கி விடுவதால் எதுவித வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. பதிலாக அரசானது தன்னை இராணுவ ரீதியாகத் தற்காப்பு நிலையொன்றினை நோக்கிப் பலப்படுத்திய வண்ணம் உண்மையான

    அடிப்படைப் பிரச்சினை என்னவென்பதை அரசியல் ரீதியில் அணுகினால் மட்டுமே காரியார்த்தமான முடிவுகளுக்கு இட்டு வர முடியும். இதை விடுத்து பிரச்சினைகளின் தோற்றுவாய் எது என்பதை அறிந்து அணுகாவிடில் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

    நாடு முழுவதிலும் நிலவும் குழப்பமும், நெருக்கடியும் மிகுந்த சூழ்நிலையில் இதன் தோற்றுவாய்களை இச்சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்வதென்பது அவசியமானதென்றே கருதுகிறேன்.

    இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன். இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948- ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.

    நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர். இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.

    இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது.

    இதற்கு முன் 1956-இல் இயற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டமானது தமிழ்பேசும் மக்களின் நடுத்தர வர்க்கத்தாரை நிலை குலையச்
    செய்திருந்தது. இக்காலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாணக் குடியேற்றத் திட்டங்கள் அங்கு வாழ்ந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளறிவிட்டன.

    இவற்றுக்குப் பின்னர் 1970-களில் இயற்றப்பட்ட இனவாரித் தரப்படுத்தலானது தமிழ்பேசும் இளைஞர்களது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியது. இதனால் கிளர்ச்சி மனப்பான்மை இளைஞர்கள் மட்டத்தில் உருவாக, அதை அடக்கப் போவதாகக் கூறி 1979-இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. காலகதியில் இச்சட்டம் இனம் முழுவதுக்குமான அச்சுறுத்தலாகிப்போனது. இவ்வாறு 1948 முதல் படிப்படியாக இயற்றப்பட்ட சட்டங்களுக்கெல்லாம் உச்சமாக விளங்கியதுதான் 1983-இல் இயற்றப்பட்ட ஆறாவது திருத்தச் சட்டம். இது அகிம்சை மார்க்கத்தைச் சார்ந்து நின்ற ஜனநாயக வழிமுறை நின்று செயற்பட்டு வந்த த.ஐ.வி.கூ. முதலான சக்திகளுக்குத் தொடர்ந்து இயங்க முடியாத வண்ணம் ஆப்பு வைத்தது.

    இச்சட்ட மூலத்தை இன்னமும் நீக்க மறுப்பதானது இனவாதத்தின் வெளிப்பாடுகள் இன்னமும் அப்படியே நீறுபூத்ததாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் எம்மைப் போன்றவர்களின் தொடர்ந்த ஜனநாயகச் செயற்பாடுகளுக்கும் அது உறுத்தலாகவே விளங்குகிறது. 1983-இல் இயற்றப்பட்ட ஆறாவது திருத்தச் சட்டம் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக வழிமுறைகளுக்குத் தடை விதித்தது போலவே இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட தென்பகுதி இடதுசாரிகளுக்கான தடை விதிப்பானது தென்பகுதி அரசியலிலும் குழப்பங்களுக்கு அடிகோலியது.

    இதன் பின்பே ஜே.வி.பி. உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் மீண்டும் தலைமறைவாகி மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர். இவற்றுடன் கூடவே வெளியுறவுக் கொள்கையில் 1983 முதல் அமெரிக்கச் சார்புப் போக்கைத் தீவிரப்படுத்தியதும் இந்தியா அச்சமடையத் தொடங்கி இலங்கை விவகாரத்தில் கூடிய தலையீடு செய்யத் தொடங்கியது.

    இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த இனவாதம் இந்தியாவுக்கு வாய்ப்பான கருவியாகப் பயன்படத் தொடங்கியது. இந்தத் தவறுகளின் விளை பயன்களே இன்றைய நெருக்கடியாக வடிவமெடுத்தன. பிராந்திய பாதுகாப்பைத் தேடமுனையும் இந்திய அரசு ஒருபுறமும் தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தேடும் விடுதலை இயக்கங்கள் மறுபுறமும் இலங்கை அரசைக் கைப்பற்ற முனையும் தென்பகுதிச் சக்திகள் இன்னொரு புறமுமாக முக்கோண வியூகம் அமைத்து இலங்கை அரசைச் சூழ்ந்து நிற்கின்றன்

    இந்த மும்முனைகளையும் எதிர்கொள்வதென்றே கூறிக்கொண்டு இந்தியஇராணுவத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தை உசார் படுத்துவதும், வடக்கு கிழக்கில் பாதுகாப்பை மீண்டும் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முனைவதும், தென்பகுதி நிலைமைகளை அடக்குவதற்காக முப்படைகளையும் ஏவிவிடப்படுவதென்பதும் தவறான அணுகுமுறைகளாகும்.

    இராஜதந்திர அணுகுமுறைகளுக்கும் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கும் அப்பால் இராணுவ பலத்தைப் பிரயோகித்து எதிர்கொள்வதற்கு முயற்சிப்பது இன்றைய சூழலில் ஆபத்தானது. பிரச்சினைகளின் தோற்றுவாய்களை புரிந்து பரிகாரம் காணாவிட்டால் இலங்கையின் இறைமை விரைவில் அகால மரணமடைந்துவிடும்.

    இந்த விவகாரங்களில் இந்திய அரசுடன் மேற்கொள்ள வேண்டிய உறவு நிலை குறித்தும் வடக்கு கிழக்கில் நிலவும் புதிய சூழ்நிலைகளைக் கையாள்வது குறித்தும் எமது கருத்தைத் தெரிவித்து இவ்வுரையை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை அரசை எதிர்நோக்கியுள்ள தற்போதைய முக்கிய நெருக்கடி இந்தியாவுடனான உறவுநிலை பற்றியதாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடானது அதனது பிராந்தியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே விளங்குகின்றது என்பது வெளிப்படையானது.

    இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து மேற்கொள்ளப்பட்ட விடயங்களைக் கணக்கில் கொண்டு இந்தியாவுடனான உறவு நிலைகளை இலங்கை அரசு சீர்செய்ய வேண்டும்.

    1970-களில் ரோகண விஜேவீரவின் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சியை அடக்க அன்றைய அரசு இந்திய இராணுவத்தை
    வரவழைத்திருந்தது. இங்கு வந்த இந்திய இராணுவம் அந்த அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாமதமின்றி வெளியேறியும் இருந்தது. ஆனால் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு அமைவாக இலங்கை இராணுவத்திற்கு வலுச் சேர்க்கும் இராணுவமாக அழைக்கப்பட்ட இந்திய இராணுவமானது திரும்பிச் செல்வதில் காட்டுகின்ற தயக்கமானது இந்த அரசு கொண்டுள்ள சர்வதேசக் கொள்கைகளின் போக்காலயே விளைந்துள்ளது.

    இதனைக் கருத்திற்கொண்டு பிராந்திய நலனை முன்னிட்டு இலங்கை அரசு இராஜதந்திர முறைகளிலேயே இவ்விடயத்தை அணுகுதல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

    இரு அரசுகளும் தமக்குள்ளே ஏட்டிக்குப் போட்டியாக முரண்பட்டுக் கொள்வதை விடுத்து ஓர் இணக்கமான நிலைமைக்கு வந்து இந்திய இராணுவத்தைக் கட்டம் கட்டமாக வெளியேற்றுவதற்கு ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

    இதற்கேதுவாக இந்திய இராணுவம் நிரந்தர யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்துவதுடன் கேந்திர ஸ்தானங்களில் மட்டும் நிலை
    கொண்டிருத்தல் வேண்டும். தமிழ்பேசும் மக்களின் போராட்ட சக்திகளாக விளங்கும் விடுதலை இயக்கங்களில் ஈடுபாடு இல்லாமல் இரு அரசுகளுக்கும் இடையே அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை – இந்திய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு வந்த இந்திய அமைதி காப்புப் படையும், இந்திய அரசின் பக்க துணையோடு நிறுவப்பட்ட வடக்குகிழக்கு மாகாண சபையும் சர்ச்சைக்குரிய விடயங்களாகப் போய்விட்டன.

    இந்த விடயங்களில் கையொப்பமிட்ட இரு அரசுகளுமே தற்போது இவ் விவகாரங்களில் முரண்பட்டு நிற்கின்றன. இதனாலேயே
    இவ்வொப்பந்தம் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை இயக்கங்களுக்கும் இடையே வடக்கு – கிழக்கில் யுத்தம் நிகழ்ந்து வந்த வேளையில் அமைதியை நிலைநாட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தியப் படைகள் இலங்கை அரசின் பணிப்பிற்கிணங்க 1987 அக்டோபர் 10 முதல் வடக்கு – கிழக்கில் யுத்தத்தில் குதித்தன.

    ஆயுதக் களைவின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த யுத்தச் சூழ்நிலையானது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே நடுநிலை தவறிப்போன இந்திய அமைதி காப்புப் படையை ஆயதக் களைவை நிறுத்தி நிரந்தர யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    மாகாண சபையைப் பொறுத்த வரையில் அது தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையப் பெறுவதற்குப் பதிலாக பழிவாங்கல்களுக்கு தளம் அமைத்ததாகவே போயுள்ளது. வடக்கு – கிழக்கில் இம்மாகாணச் சபைத் தேர்தலுக்குப் பின் பழிவாங்கும் அரசியலே மேலோங்கி நிற்கிறது. இது வடக்கு – கிழக்கில் அமைதியை நாடி நின்ற மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டது.

    இவ்வேளையில் எமது இயக்க உறுப்பினர்கள் மீது ஒப்பந்தத்தின் பின் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் பற்றி சில வார்த்தைகள் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது இது இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது எனவும், தமிழ் மக்களுக்குத் தீர்வெதையும் தரவில்லையெனவும் தெளிவுபடுத்தியிருந்த நாம் அதன் அமுலாக்கத்திற்கு வன்முறை மூலம் தடையேதும் கொடுக்க மாட்டோம் என்பதற்கு உத்தரவாதமாக திருப்திகரமான முறையில் ஆயுத ஒப்படைப்பினைச் செய்திருந்தோம்.

    இன்றுவரை எமது பல உறுப்பினர்களின் இழப்புகளின் மத்தியிலும் இம்முடிவகை; கடைப்பிடித்தே வருகிறோம். ஆயினும் எமது தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கும் நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சில இயக்கங்கள் மர்மமான முறையில் எமது உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கடத்திக் கொன்று வருகின்றனர்.

    இதுவரையில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இக்கொலைகளில் பெரிதும் சம்பந்தப்பட்டவர்கள் மாகாண சபை உருவாக்கத்தில் பின் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிராயுதபாணிகளாக உள்ள எமது உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி போலவே வடக்கு – கிழக்கில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு நேர்ந்து வருகிறதென்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். வடக்கு – கிழக்கில் தற்போது ஆயுதக் களைவு என்பது இராணுவ வன்முறையாகவும், மாகாண சபையென்பது பழிவாங்கும் சபையாகவும், வடக்கு – கிழக்கு பாதுகாப்பு ஏற்பாடென்பது இளைஞர்களைக் கடத்திச் செல்வதென்பதாகவும் உருமாறிப் போயுள்ளன.

    தோழர்களோடு தோழர் இரட்ணா தோழர் ஐயா, தோழர். வே. பாலகுமாரன், தோழர் இரத்தினசபாபதி, தோழர் சங்கர் ராஜி வடக்கு – கிழக்கில் விடுதலை இயக்கங்களுக்கிடையே போட்டா போட்டி நிகழ்கின்ற அவ்வேளையில் இதற்குப் பரிகாரம் காணாமல் அமைதியைத் தோற்றுவிப்பதென்பது சாத்தியம் அற்றதாகும். இந்த வகை இயக்க விரோதங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகளின் பின்பு உருவாக்கப்பட்ட கசப்பான அனுபவங்களாகும். திம்புப் பேச்சுவார்த்தையின் போது நான்கு அம்சங்களில் இணக்கம் பெற்ற அனைத்து இயக்கங்களும் உறுதியாக நின்று இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தன.

    இந்த ஒற்றுமையானது புறசக்திகளின் நலன்களுக்குக் குந்தகமாகத் தோன்றியதன் பின்பே இயக்க மோதல்கள் தூண்டி விடப்பட்டிருந்தன. இதன் பின்பு இன்றுவரை அந்த முரண்பாடானது வளர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலை மாற இரு அரசுகளும் இன்றைய நிலையில் விடுதலை அமைப்புகளைக் கூறுபோட்டு அணுகுவதைத் தவிர்த்து வடக்கு – கிழக்கில் அமைதி திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இறுதியாகக் கேட்டுக்கொண்டு எமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தும் இவ்வுரையை வழங்கச் சந்தர்ப்பம் அளித்த இந்த அவைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    Reply
  • peter
    peter

    தோழர் ரட்ணசபாபதியை இந்த தாங்கு,தாங்குகின்றார்களே, அவர் இறக்கும் போதும், இங்கிலாந்து வைத்தியசாலைகளில் தடுமாறிய போதும், இந்த செந்தோழர்கள் எங்கே போனார்கள்.

    Reply
  • palli
    palli

    இவர் காட்டிய திசையில் எத்தனை பேர் பயணித்தீர்கள், இப்போ எத்தனை பேர் அதை தொடர்கிறீர்கள்? அதேபோல் இவர் காட்டிய திசை மக்களுக்கா?? அல்லது இயக்கத்துக்கா?? இறுதி காலத்திலாவது இந்த மக்களுக்கு ஒரு சரியான திசையை காட்டியிருக்கலாமோ என பல்லி நினைப்பது தவறா? அது சரி தோழர் அன்று ஒரு திசையிலும் (போராட்டம்) இன்று ஒரு திசையிலும் (ஆட்சியில் பங்கு) போவதால் தோழருக்கு தோழர் இரட்ணா அவர்கள் எந்த திசையை காட்டினார்,?? 37 அமைப்புகள் இருந்ததாக சொல்லுகிறார்கள் அதில் ஏதாவது ஒரு அமைப்பிடம் இவரது திசையான (கொள்கை) இருந்திச்சா?? அல்லது இவர்தான் இயக்க போராட்டம் தடுமாறிவிட்டது மக்களே உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள் எனதான் சொன்னாரா??

    இரட்ணாவின் கருத்துக்கள் மிக வலிமையானவை(சொல்லுகிறார்கள்) ஆனால் எப்படி போராட்டம் முள்ளிவாய்க்கால் வரை வந்தது? பல்லியின் கருத்து இவரும் இமது மக்களின் இன்றய நிலைக்கு ஒரு விடிவெள்ளிதான்; இருப்பினும் இவரது இறுதிகாலங்கள் மிகவும் வேதனைக்கு உரியது என சிலர் பேச கேட்டதுண்டு, அது தாம் தமிழ்மக்களை நடுதெருவில் கொண்டுவந்து விட்டு விட்டோம் என்னும் ஏக்கமோ அல்லது தவிப்பாய் இருக்கலாம் என நான் எண்ணியதுண்டு, இது இரட்ணா மீது வைக்கும் விமர்சனம் அல்ல அவரை வைத்து இனியும் அரசியல் தேவையா என்னும் கேள்வியே,,,??

    Reply
  • அபிமன்யு
    அபிமன்யு

    ஈபிஆர்எல்வ்(பத்மநாபா)வினால் இலங்கையில் வெளியிடப்படும் கண்ணோட்டம் ஜூலை 2010 இதழில் பிரசுரிக்கப்பட்ட கேள்வி பதில் பகுதியிலிருந்து அமரர் இரத்தினசபாபதி பற்றி:–

    கேள்வி—

    இந்த கொடூரமான அழிவுகள் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படுமென நீங்கள் எப்பொழுதாவது நினைத்தீர்களா?

    பதில்–

    1970ம் ஆண்டுகளின் நடுப்பகுதி!- அப்பொழுது ஆபிரிக்காவில் ப்பயவ்ரா (Biafra) என்ற நாட்டில் தனிநாடு கோரிக்கைக்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த நாட்டு மக்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்தியவர்களின் தவறான அணுகுமுறைகளினால் போராட்டம் படுதோல்வியுற்றுப் போனதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்! அப்பொழுது ஈரோஸ் (EROS) அமைப்பின் ஸ்தாபகரும், ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் போராட்டம் பற்றிய தத்துவார்த்தமான கண்ணோட்டத்திற்கு அடித்தளம் இட்டும் பாலஸ்தினிய விடுதலை இயக்கத்துடன் (PLO) தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடைய பாசறைகளில் தமிழீழத்தைச் சேர்ந்த சில இளைய தலைவர்களும், போராளிகளும், அரசியல் அறிவும் ஆயுதப் பயிற்சிகளும் பெறுவதற்கு ஒழுங்குகள் செய்தவருமான அமரர் இரத்தினசபாபதியுடன்(‘ரட்னா’) ஈழவிடுதலை சம்பந்தமாக நான் அளவளாவிய சந்தர்ப்பங்களில் ஒரு முறை அவர் கூறிய வார்த்தைகள்:-

    “நாம் வெகு கவனமாகவும், மிகுந்த பொறுப்புடனும், மக்கள் மீது உண்மையான கரிசனையுடனும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆயுதப் போராட்டம் குறுந்தேசிய வாதிகளாலும், நடுத்தர வர்க்கநலன் மட்டுமே கருதுபவர்களாலும், தமிழர் மத்தியில் இருக்கும் இனவாதிகளாலும், பதவிமோகம் கொண்டவர்களாலும் கடத்தப்பட்டுத் திசை திருப்பப்படுமானால் Biafra இல் நடக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பயங்கர அழிவுகள் போல் எமது மக்களுக்கும் ஏற்பட்டு விடும். எமது தமிழ்மக்களை இப்பொழுது இருக்கும் நிலைமையை விட படு மோசமான நிலைமைக்குத் தள்ள வழி கோலி, ஈழத்தமிழர்கள் தலைதூக்க முடியாத தாழ்ந்த நிலைக்குக் கொண்டு போய் விடும்.- இது எம்மை நம்பி வந்த மக்களுக்கு நாம் செய்த மாபெரும் துரோகமாக மாறி விடும்!”

    நினைவை மீட்கிறேன்: தூரதிருஷ்டவசமாக எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

    எங்கிருந்தோ ரட்னா, “சொன்னேனே-கேட்கவில்லையே!” எனக் குமுறுவது போன்ற பிரமை!

    அந்த வார்த்தைகள் முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது என் காதுகளில் இன்னமும் அதிகமாக ரீங்காரமிட்டு அலைக்கழிக்கிறது!

    Reply
  • santhanam
    santhanam

    அவருடைய வாழ்வில் மதுவிற்கு அடிமையாகதானிருந்தார். குடி அவரை குடித்தது தோழர்கள் மாலை நேரத்தில் தூக்கிகொண்டு கிடத்திய நாட்கள் அதிகம்.

    Reply
  • saba
    saba

    குடித்து மயங்கி கிடந்த நாட்கள் வெகுவானது தான். குடிக்காதவன் நல்லொழுக்கமானவன் எனப்பெயரெடுத்தவன் வாழ்வை விட அவர்வாழ்வு பெறுமதியானது.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    அபிமன்யு, // எங்கிருந்தோ ரட்னா, “சொன்னேனே-கேட்கவில்லையே!” எனக் குமுறுவது போன்ற பிரமை!//

    அப்போ ஏன் ஈபிஆரெல்வ், ஈபிஎன்டில்வ், ஈபிஆரெல்வ்(பத்மநாபா) எல்லாம் உருவானவர்கள். அதை ஒருக்கா அவையளுட்டா கேட்டு சொல்லுங்கோ. மறந்து போடதைங்கோ!!

    Reply
  • நந்தா
    நந்தா

    இரத்தின சபாபதி எதற்கு வழிகாட்டினார் என்பது பலருக்கு இன்னமும் தெரியாத மர்மம். அவர்களின் செலவுகளுக்கு அந்தநாளில் பணம் கொடுத்தவர்கள் தமிழர்களுமல்ல இலங்கையர்களுமல்ல இந்தியர்களுமல்ல.

    ரத்தினா பாலசிங்கம் ஆகியோர் லன்டனில் “மார்க்சிசம்” பேசி இலங்கை மார்க்சிஸ்டுகளுக்கு “கொள்ளி” வைக்கும் கைங்கரியத்தினை கச்சிதமாக செய்தனர்.

    ஈரோஸ் இயக்கத்தினருக்கும் மார்க்சிசத்துக்கும் என்ன சம்பந்தம்? புலிகளின் நிழலாக இருந்த ஈரோஸ் ரத்தினசபாபதியின் வழிகாட்டலில் நின்றது என்று யாராவது கருதினால் ரத்தினசபாபதி “போத்தல்களுக்காகவும் பணத்துக்காகவும்” அன்னியர்களுக்கு இலங்கையை விற்ற கூட்டத்தில் முதன்மையானவர் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பல்லி கேட்பதைப் போல தற்போது டக்ளஸ் தேவானந்தா இப்பொழுது எதனைப் பின் பற்றுகிறார்?

    ரத்தினசபாபதி மாத்திரமல்ல மற்றும் பலரும் “புலிகள்” எப்படி இஸ்ரேலில் இராணுவப் பயிற்சி பெற்றனர் என்பதை இது வரையில் சொன்னது கிடையாது.

    அந்தநாட்களில் “பாலஸ்தீன” பிரச்சனை விடுதலைக்கான பிரச்சனை என்றே கருதப்பட்டது. பீ எல் ஓ பயிற்சி பெற்றவர்கள் அங்கம் வகித்த அனைத்து இயக்கங்களும் இஸ்ரேலில் பயிற்சி பெற்ற புலிகளினால் தவிடு பொடியாக்கப்பட்டது பற்றி ரத்தினசபாபதி உயிரோடு இருக்கும் வரயில் மூச்சே விடவில்லை.

    அதன் மூலம் இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்க-பிரிடிஷ் சார்பு தத்துவார்த்தம் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டது.

    இரத்தினசபாபதி போன்ற “போலி” இடதுசாரிகள் உண்மையான இடதுசாரிகளை அடையாளம் கண்டு ஒழித்துக் கட்டவே “இடதுசாரி”, சோஷலிச முகமூடி அணிந்தவர்கள்.

    சகல தமிழ் இயக்கங்களும் “இந்திய எதிர்ப்பு” என்ற விதண்டாவாதத்தை யாருடைய நன்மைக்காக முன்னெடுத்தார்கள் என்பது இப்போது புரிந்து கொள்ளப்படும் யதார்த்தம்.

    இந்த தமிழ் விடுதலை போராட்டம் என்பது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் எதிரானது மாத்திரமல்ல அமெரிக்க-பிரிடிஷ் ஏகாதிபத்தியங்களின் நலஙளுக்காகவுமே லண்டனில் இருந்து முடுக்கி விடப்பட்டதென்பதை இந்தியாவும் இலங்கையும் கண்டு கொள்ள பல வருடங்கள் ஆகிய போதிலும் இந்திய நாராயண சாமிகளும் இலங்கை கோதபாயாக்களும் கண்டு பிடித்து அழித்து விட்டது பிராந்திய அரசியலில் சமாதானத்தை உண்டு பண்ணியுள்ளது.

    ஈழக்கனவுகள், இந்திய எதிர்ப்பு, கால்சட்டை காந்தியம், லண்டன் மார்க்சியம் என்பனவற்றை மனதில் கொண்டு திரிவது இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர உபத்திரவத்தையே கொடுக்கும்!

    Reply
  • babu
    babu

    ரட்ணாவின் தனிப்பட்ட வாழ்வு பற்றி அலசுவதில் யாருக்க நன்மை அதைத்தானே ரட்ணா என்ன நான் சொல்லவதையும் அப்படியே நம்பிடாதே என்னடைய குடியை என்னோட விட்டு விடு நீ சுதந்திரமாக யோசி என்ன செய்யலாம் எது சரி என்று நானும் நீயும் பொதுவில் உடன்படுகிறோம் அது தான் இங்கு வாதமே தவிர எனது குடி அல்ல.

    Reply
  • palli
    palli

    //அது தான் இங்கு வாதமே தவிர எனது குடி அல்ல.//
    இதில் யாரும் வேறுபடவில்லை ஆனால் மக்களை உசுப்பேத்தி நடு ரோட்டிலும் காட்டிலும் அலையவிட்டு விட்டு வெட்டு புள்ளி சொல்லி உள்ள கல்வியையும் சுடுகாடு ஏற்றிவிட்டு தான் அல்லது தாங்கள் மட்டும் வல்லரசான ராணியின் நாட்டில் தன் குடும்பத்தையும் தவிக்க விட்டுவிட்டு மதுவில் மயங்கலாமா?? சரி இவர்தான் அப்படியெனில் இவர் வாரிசாக உருவாகி இவருக்கே குருவான பாலா கூட இறுதிகாலங்களில் மதுவுடந்தான் தனிமையை கழித்தாராம்; அதே போல் பாலஸ்தீன தொடர்பு கிடைத்தத்துக்கு இதே இரட்ணாதான் காரணம் என சொன்னார்கள் (எனக்கு தெரியாது) அப்படியாயின் இறுதியில் புலிகள் அத்தனை தொடர்புகளையும் துண்டித்து தாமே ஈழ வாரிசுகள் என்பதாக ஸ்ரேல் பாலஸ்தீனம் போன்ற நாடுகளுடன் இன்ய அரசவிசுவாசி கே பி நட்புறவாடியது எப்படி என நாம் கேக்கவேண்டாமோ? முதலில் எனக்கு ஒரு சந்தேகம் இவர் ஈரோஸ் அமைப்பா? அல்லது ஈ பி ஆர் எல் எவ் அமைபா?? அதில் இருந்துதான் இது வந்ததென யாராவது ஆருடம் சொல்ல வேண்டாம்; பல்லியின் வினா தனிப்பட்ட இரடணாவை பற்றியதே,

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    நந்தா on September 28, 2010 7:04 am
    நந்தாவிற்கு பல உட் சங்கதிகள் தெரியாது. Diplomacy இல் பல விடையங்களை அவர் புரியவில்லை. அவ்வளவு தான்.

    Reply
  • Aaivu
    Aaivu

    Jeyabalan,
    As you know in and out of our struggle (at least for some extent) for a long time. Then you should not entertain some comments.

    You might say that would be the freedom of thoughts and freedom of expression. If you assume the above hypothesis would you consider a speech of person in mental disorder. Some of the commentators do not have adequate knowledge about the history of our struggle, further they are making comments based on some news items, which are politically motivated lies.

    In this scenario readers (without enough political background) would be mislead to a disasters end. So that, as a responsible journalist you must take note of these facts given as comments. This is my humble request.

    Reply
  • நந்தா
    நந்தா

    உட்சங்கதிகள் தெரிந்தவர்கள் அவற்றை சற்று எடுத்து விட்டு மக்களுக்கு சிறிது ஞானப்பிரகாசம் கொடுத்தால் குறைந்தா போய் விடுவார்கள்?

    டிப்லோமஸி என்பது முள்ளிவாய்க்காலில் நிர்வாணாமாகியதைக் கண்ட பின்னரும் தமிழர்கள் அந்த வார்த்தையை உபயோகித்து நாறுவது நல்ல காரியமாகத் தெரியவில்லை! டிப்ளோமஸி என்பது காட்டிக் கொடுத்தல் அல்ல!

    Reply
  • Aaivu
    Aaivu

    An important fact in his (Ratnaspapathy’s) maiden speech was not indicated anywhere here, that is, ONE COUNTRY TWO NATIONS. Why???…..

    Reply
  • நந்தா
    நந்தா

    Aaivu on September 28, 2010 11:25 am

    What are you trying to impress here? Have you any problem in digesting facts and opinions?

    Try to type in TAMIL next time.

    Reply
  • Aaivu
    Aaivu

    Dear நந்தா on September 29, 2010 11:40 am,

    I don’t have any problem over the opinions delivered on the basis of actual facts, but the opinions should not be delivered on the basis of some politically motivated lies. That would be more dangerous than a single drop of venom.

    Always I am making comments on the basis of facts that I verified several times. This is my humble request.

    Reply
  • அபிமன்யு
    அபிமன்யு

    அப்பாவி என்ற பெயரில் இங்கு பின்னூட்டம் எழுதியவர் “அப்போ ஏன் ஈபிஆரெல்வ், ஈபிஎன்டில்வ், ஈபிஆரெல்வ்(பத்மநாபா) எல்லாம் உருவானவர்கள். அதை ஒருக்கா அவையளுட்டா கேட்டு சொல்லுங்கோ. மறந்து போடதைங்கோ!!” என்று எனக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அவர் கேட்ட விடயத்திற்கு வரும் முன்னர், அமரர் இரத்தினசபாபதி முன்வைத்த அரசியலின் அடிப்படை என்ன என்பதை நான் கிரகித்த வகையில், ஓரளவு இலகுவாக விளங்கும் வகையில், கூறுவதானால்:—

    1.காலங்காலமாக சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளும் சரி, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் சரி, அடித்தளச் சாதாரண சிங்கள மக்களும், தமிழ்மொழி பேசும் மக்களும் எதிர் நோக்கும் உண்மையான பிரச்னைகளான பொருளாதார நலிவு, வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறை ஆகியவைகளை விவாதித்து அதற்கான பரிகாரங்களை முன்னெடுப்பதற்குத் தடையாகவும், வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதற்காகவும், மொழியையும் இன முரண்பாடுகளையுமே முன்னிலைப்படுத்தி, மக்களை உணர்ச்சி வசப்படுத்தியும் உண்மை நிலையிலிருந்து திசை திருப்பியும் வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்டு வாழும் சாதாரண சிங்கள உழைப்பாளி மக்களும் அதே போன்று மலையக மக்கள் உட்பட்ட தமிழ் பேசும் இனத்தின் மத்தியில் வாழும் மக்களுமே. இதனால் பயன்பெறுவது இரு சாராரிலுமுள்ள முதலாளி வர்க்கமும், நடுத்தரவர்க்க நலன்களும், ஏதாச்சாதிகார சக்திகளுமே.

    2.அடித்தள சிங்கள மக்களும், அடித்தளத் தமிழ் மக்களும், இந்த ஏமாற்று அரசியலுக்குத் தொடர்ந்தும் பலியாகாதிருக்க வேண்டுமானால், இந்த இனப் பிரச்னைக்கு ஒரு முடிவு காணப்படுதல் வேண்டும்.

    3.வாக்குகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாதவாறு ‘ஜனநாயக அரசியல்’ என்ற போர்வையில் ஒடுக்கும் சக்திகளின் கைகள் எப்பொழுதுமே ஓங்கிவருவதானால், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த ஆயுதப்போராட்டமே இதற்கு மாற்றான உகந்த வழியாகும்.

    4.தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டம் அதிகாரவர்க்கத்தின் கட்டமைப்புக்கு எதிரானதேயன்றி சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதல்ல. தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தார்மீகத் தன்மையை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களும் தம்மை ஒடுக்கி வைத்திருக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் வகையில் ஈழத் தமிழ்பேசும் மக்களின் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுவது இன்றியமையாத அணுகுமுறையாக இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால், எமது போராட்டம், சிங்கள, தமிழ் இனவாதிகளிதும், பிற்போக்குச் சக்திகளிதும் கைகளை மேலும் பலப்படுத்துவதில்தான் முடியும்.

    5.சிங்கள மக்களின் மத்தியிலுள்ள முற்போக்குச் சக்திகளின் இணைப்பையும், PLO போன்ற சர்வதேச விடுதலை இயக்கங்களின் ஆதரவுகளையும் பெற்று இந்த இனப்பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தோமானால்தான், சிங்கள மக்களுக்கும், தமிழ்பேசும் மக்களுக்கும் உண்மையான சுதந்திரம், சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கலாம்.

    இனி, அப்பாவி எனக்கு விடுத்த வேண்டுகோளுக்கு வருவோம்.—அந்த வேண்டுகோளின் பிரகாரம், தனது பின்னோட்டத்தில் குறிப்பிட்ட அமைப்புகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா)வைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபொழுது, அவர் கூறிய பதில்:–

    “உண்மையாக வரலாற்று ரீதியாகப் பார்க்கப் போனால், ரட்ணாவின் அடிப்படைக் கொள்கைகளை ஆத்மார்த்தமாகக் கடைப்பிடித்து செயற்பாடுகளை மேற்கொண்டவர் பத்மநாபா ஒருவரே. அவரிடமிருந்து பிரிந்து ஈபிஆர்எல்வ் அமைப்பை உருவாக்கியதன் காரணம் கொள்கை வேறுபாடல்ல; அமைப்பைக் கட்டியெழுப்பும் ஆளுமையை ரட்ணா இழந்து கொண்டு வந்தமையும், அவருடைய செயற்பாடுகளில் தேக்கங்கள் ஏற்பட்டமையுமே காரணங்களாகும். மேலும், இந்தியாவின் ஈடுபாடு காரணமாக இனியும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தால் இழப்புகள்தான் அதிகமாகும் எனக் கருதிய ரட்ணா, அதிகப்பட்ச வாக்குகளால் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்ட்ட பொழுது, வெற்றி வாய்ப்பு பலமாக இருந்தும் அந்தத் தேர்தலில் போட்டியிடாத பத்மநாபா, ரட்ணாவின் வெற்றியைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்றும் கூறினார்.

    எந்தச் சக்திகள் இனமுரண்பாட்டுக்கே முக்கியத்துவம் கொடுத்து இனத்துவேஷத்தை ஊட்டி வாக்குகள் பெற்று சிங்களமக்களையும் தமிழ்மக்களையும் ஏமாற்றி வந்தார்களோ அதே சக்திகள்தான், ‘தமிழ்த் தேசியம்’, ‘தமிழர் தாயகம்’ ‘தனித்தமிழ் நாடு’ என்ற கோஷங்களைக் கையிலெடுத்து ஈழ மக்களின் நியாயமான போராட்டத்தைக் கடத்தினார்கள்; சிங்கள பொதுமக்களைக் கொன்றார்கள்; மக்களை மையப்படுத்திய அரசியல் கைவிடப்பட்டு ஆயுதபலமே மையப்படுத்தப்பட்டதனால், ஈழமக்களின் உடைமைப் போராட்டம் நோக்கிப் பயணித்த பஸ்ஸின் பாதை திருப்பப்பட்டது. கடத்தப்பட்ட அந்த பஸ்ஸின் பாதை ரட்ணாவின் அரசியல் தர்க்கீகத்துக்கு முற்றிலும் முரணானது எனத் தெரிந்தும், ரட்ணாவின் அமைப்பைச் சேர்ந்தவர்களே, அந்த பஸ்ஸின் பின்னால் தொத்திக் கொண்டார்கள். தொத்திக் கொண்டதுமட்டுமல்லாமல் யாரோ பஸ் ஓட்ட தங்கள் அமைப்பைச் சேர்ந்த, தொத்திக் கொண்ட, முக்கியஸ்தரே அந்த பஸ்ஸை ஓட்டுவதாக பீற்றிக் கொண்டார்கள்.

    அதற்குப் பின்தான், அந்த பஸ்ஸின் பாதை அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்வது தவிர்க்க முடியாது என எண்ணிய ரட்ணா, தன்னுடன் பயணித்தவர்கள் போல் அந்த பஸ்ஸில் தானும் தொத்திக் கொள்ள விரும்பாது, அரசியல் ரீதியாக தான் எதுவுமே செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டபோது, மனமுடைந்த நிலையில் லண்டன் திரும்பினார். .

    மானசிகமான ஈடுபாடு கொண்டு மனமுடைந்தவர்கள் என்ன செய்வார்கள்?—விரக்தியில் அளவிற்கு அதிகமாக மதுவை நாடுவார்கள்; மனநோயாளியாவார்கள்; மறந்து வாழ முயற்சிப்பார்கள்! – அதுதான் ஈழ ஆயுதப்போராட்டத்தின் உண்மையான பிதாமகனான, அதற்கான தர்கீகத் தத்துவத்தை உருவமைத்தவரான, சிந்தனையாளனான, இரத்தனசபாபதிக்கும் நடந்தது!.

    ்PளோT

    Reply
  • BC
    BC

    //மானசிகமான ஈடுபாடு கொண்டு மனமுடைந்தவர்கள் என்ன செய்வார்கள்?—விரக்தியில் அளவிற்கு அதிகமாக மதுவை நாடுவார்கள்; //
    இவர் முன்பே(1985) மதுவோடு தான் இருந்ததாக அறிந்தேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //politically motivated lies//

    Can you show a few if you can? In my view, EELAM is a politically motivated lie!

    Reply
  • நந்தா
    நந்தா

    //மானசிகமான ஈடுபாடு கொண்டு மனமுடைந்தவர்கள் என்ன செய்வார்கள்?—விரக்தியில் அளவிற்கு அதிகமாக மதுவை நாடுவார்கள்; மனநோயாளியாவார்கள்; மறந்து வாழ முயற்சிப்பார்கள்! – அதுதான் ஈழ ஆயுதப்போராட்டத்தின் உண்மையான பிதாமகனான, அதற்கான தர்கீகத் தத்துவத்தை உருவமைத்தவரான, சிந்தனையாளனான, இரத்தனசபாபதிக்கும் நடந்தது!. //

    ரத்தினசபாபதி “ஈழப் போராட்டத்துக்கு” முன்னரே “தண்ணீயில்” மூழ்கியவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்!

    Reply
  • cheap siththanantha
    cheap siththanantha

    நந்தா
    What is your problem with Ratna’s contribution to Tamil Speaking people’s legitimate struggle?

    Karl Marx had an illegitimate child with his family’s maid. Mao had had series of sexual relation with several young women and it was alleged he suffered sexually transmitted disease. What was wrong with Ratna too having less than perfect behaviour? He was not trying to contribute to theocracy but a democracy. The fundamental aspect for which Tamil Speaking people commenced their struggle was to restore their democratic rights and not to build a fundamentalist state.

    Beyond all these personal adversities their contribution towards human emancipation is well documented.

    Have you ever considered reading his analysis of the struggle? There is a stark difference between the war and people’s struggle. There were also and still are differences between Tamil Eelam and “Eelam”. Nation building and carving out a separate state are two different things. Nation building is to do with ownership of the land.

    Any student of Sri Lankan political history would have by now informed oneself the track record of the Left parties in Sri Lanka.

    I don’t see any substantial contribution in your comments except to condemn others for the sake of condemning the them. Any comments should stick to the main theme and take the discussion forward rather than dwelling on Ratna’s drinking problem. What really do you want to say about his thesis on “EROS” ideology? There were several ideological positions EROS was identified with. You have the right to question its overall position from 1975 to 1990.

    EROS was a broad church of all sorts of people participating in the pursuit of establishing a just society in Sri Lanka for the good of all people, and democracy as its basic tenet.

    “If you cannot play the ball play the man” – this is what most of you are attempting in this forum.

    Thesamnet is providing a vital space for discussion we might as well use it wisely.

    Reply
  • Aaivu
    Aaivu

    Dear நந்தா on September 30, 2010 2:58 am,
    “Can you show a few if you can? ”

    Yes, certainly, a simple answer is
    >>புலிகள் இஸ்ரேலில் இராணுவப் பயிற்சி பெற்றனர்

    “In my view, EELAM is a politically motivated lie!”
    Please, carefully (at least) read Ravi Suntharalingam’s article in this website. Beyond that there are several facts.

    Reply
  • அபிமன்யு
    அபிமன்யு

    ஈழ அரசியலில், சிங்களப் பேரினரினவாதத்திற்கு மாற்றாக, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, TULF, புலிகள், இப்பொழுது TNA போன்று, குறுந்தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்காமல், ஆயுதப் போராட்டத்திற்கான தர்க்கீகத்தையும், தத்துவத்தையும் முன் வைத்தவர் ரட்ணா என அழைக்கப்பட்ட இரத்தினசபாபதி. ஈழ அரசியலின் ஆயுதப் போராட்டத்தில் அவரது பங்களிப்பும், தாற்பரியமும் பதியப்பட வேண்டியது என்ற ஆவலில் அவை பற்றி விபரமாக எழுதினால், பின்னூட்டங்களாக வருபவை:–

    —“இவர் முன்பே (1985) மதுவோடு தான் இருந்ததாக அறிந்தேன்” –(BC);

    –“ஈழப் போராட்டத்துக்கு முன்னரே “தண்ணீயில்” மூழ்கியவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்!” (நந்தா)

    –“அவருடைய வாழ்வில் மதுவிற்கு அடிமையாகத்தானிருந்தார். குடி அவரை குடித்தது. தோழர்கள் மாலை நேரத்தில் தூக்கிகொண்டு கிடத்திய நாட்கள் அதிகம்”. (சந்தானம்)

    –“……..தன் குடும்பத்தையும் தவிக்க விட்டுவிட்டு மதுவில் மயங்கலாமா?” (பல்லி)

    இங்கு பேசுபொருள், ரட்ணாவின் தனிப்பட்ட வாழ்க்கையோ, அவரது குடும்ப வாழ்க்கையோ அல்ல. அவர் மிதமாகவே மது அருந்தியவர்தான்; நல்ல சம்பளத்துடன் தரமான உத்தியோகம் பார்ப்பதற்கான கல்வித் தகுதியிருந்தும், தனது இளவயதிலேயே ஈழ அரசியலில் முழுநேரமாக தன்னை அர்ப்பணித்து, குடும்பத்தைப் பராமரிக்காமலும், பணமுடைப்பட்டும், சில சமயங்களில் மற்றவர்களிடம் அற்பசொற்ப பணத்தை எதிர்பார்த்தும் வாழ வேண்டிய தூரதிருஷ்டத்திற்கும் அவர் ஆளாகியிருந்தார்தான்.

    அதற்காக, அவரது அரசியல் பங்களிப்பை இரண்டாம் பட்சத்திற்குத் தள்ளி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் தவறுகளை முன்வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

    ரட்ணா ஸ்தாபித்த அமைப்பைச் சேர்ந்த, புலிகளின் வாலில் தொங்கிக் கொண்டு ரட்ணாவின் அரசியல் நிலைப்பாட்டுக்குச் சற்றேனும் ஒவ்வாத அரசியலை மேற்கொண்டவர்கள், கார்ல் மார்க்சிஸின் கோட்பாடுகளைப் பேசுவதற்கோ, ரட்ணாவின் அரசியலுக்கு உரிமை கோரவோ, தார்மீகத்தை இழந்தவர்கள்.

    எப்பொழுதுமே, எப்படியாவது, அதிகார வர்க்கத்துடன் இணைந்து அரசியல் நடாத்திவரும் டக்ளஸ் தேவானந்தா திடீரென ரட்ணாவிற்கு அஞ்சலி உரை ஆற்றியிருப்பது ஒரு முரண்நகைதான்!– ஏன், இப்படி, இப்போது என்று தெரியவில்லை!. –ஒரு வேளை, ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா)வின் செயற்குழுவைச் சேர்ந்தவரும், இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னைய முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் இலங்கையில் தற்போது இருப்பதனால், ரட்ணாவின் அரசியல் பங்களிப்புக்கும் அங்கீகாரம் கொடுத்தவர் தான் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என டக்ளஸ் கருதியிருப்பாரோ தெரியவில்லை.

    எது எப்படியெனினும், தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டத்தை, ஜனநாயக அரசியல் காலகட்டத்தில் நடந்தது போலவே, குறுந்தமிழ்த் தேசியவாதிகள் கைப்பற்றி, திசைதிருப்பி, தமிழ்மக்களை முன்னெப்பொழுதுமில்லாத அழிவுகளுக்கு இட்டுச் செல்லப் போகிறார்களே என்று அப்பொழுது ரட்ணா தெரிவித்த கரிசனையும், எச்சரிக்கையும், பயமும்கூட தூரதிரருஷ்டவசமாக இப்பொழுது நடந்தேறிவிட்டது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //–“ஈழப் போராட்டத்துக்கு முன்னரே “தண்ணீயில்” மூழ்கியவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்!” (நந்தா)//
    ஆக மதுவில் தொடங்கியதுதானா ஈழ போராட்டம்?? குடித்து விட்டு குடும்பத்தையே கவனிக்கமுடியாது இதில் நாட்டை பிரித்து ஆழ புறப்பட்டது தப்புதானே?

    //இங்கு பேசுபொருள், ரட்ணாவின் தனிப்பட்ட வாழ்க்கையோ, அவரது குடும்ப வாழ்க்கையோ அல்ல.//
    பின்பு என்ன அவர் எப்படி விண்வெளியில் பறந்தார் என்பதா? தனிமனித புகழ் பாடும்போது அவரது குறைகள் சொல்லபடாதா??
    //அவர் மிதமாகவே மது அருந்தியவர்தான்;:://
    அதன் மகிமைகளை தேசத்தில் ஒரு கட்டுரையாக எழுதுங்கள் வருங்கால சந்தத்திகளுக்கு மது எதுக்காக என தெரியட்டும்;

    //; நல்ல சம்பளத்துடன் தரமான உத்தியோகம் பார்ப்பதற்கான கல்வித் தகுதியிருந்தும், //
    இவரை விட தகுதியானவர்கள் மட்டுமல்ல தாமே குடும்பத்தை கவனிக்க வேண்டிய சில குடும்ப பொறுப்பானவர்களும் இவர்களது ஈழவெறியால் குடும்பத்தை தவிக்கவிட்ட செய்திகளும் உண்டு,

    //சில சமயங்களில் மற்றவர்களிடம் அற்பசொற்ப பணத்தை எதிர்பார்த்தும் வாழ வேண்டிய தூரதிருஷ்டத்திற்கும் அவர் ஆளாகியிருந்தார்தான். //
    இதை சொல்வதில் உஙளுக்கு பெருமை ஆனால் எமக்கு வெக்கமாக உள்ளது ,ஈழதமிழனின் கல்வியறிவு இப்படி அலைபாயுதே என;

    //தமிழ்மக்களை முன்னெப்பொழுதுமில்லாத அழிவுகளுக்கு இட்டுச் செல்லப் போகிறார்களே என்று அப்பொழுது ரட்ணா தெரிவித்த கரிசனையும், எச்சரிக்கையும், பயமும்கூட தூரதிரருஷ்டவசமாக இப்பொழுது நடந்தேறிவிட்டது//
    இதில் இவரது பங்கு என்ன என்பதே இன்றய வாதம்;? இரட்ணா மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் அவரது அரசியல்; அவர் கேட்ட ஈழம்; அனைத்தையும் நடுரோட்டில் விட்டு விட்டு தான் மட்டும் அதனை மறக்க குடிபோதையில் இருந்தது நியாயமா?? ஓரு குடும்பத்தை பார்க்க முடியாத ஒருவர் எப்படி ஒரு சமூகத்தை பார்க்கவோ அல்லது சீர் திருத்தவோ முடியும் என்பதுதானே எமது கேள்வி??

    Reply
  • நந்தா
    நந்தா

    இரத்தின சபாபதிக்கு மதிப்புக் கொடுத்து அவரின் மார்க்சிச கதைகளில் அள்ளுண்டு பி எல் ஓ பயிற்சிக்குப் போனவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர்.

    மார்க்சிசம் எந்தக் காலத்திலும் “மொழி” அடிப்படையில் ஆயுதப் போராட்டம் பற்றி உபதேசிக்கவில்லை.

    அன்டன் பாலசிங்கமும் இரத்தினசபாபதியும் விட்ட மார்க்சிச கரடிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வெளினாட்டு “முதலாளித்துவத்துக்கு” எப்படி தமிழ் மக்களை சேவை செய்ய வைக்கலாம் என்பதாகவே இருந்தது.

    “மக்களை அணிதிரட்டல்” என்ற மார்க்சினதும் மாவோவினதும் பாலபாடத்தைக் கூட தொட்டுப் பார்க்காத இரத்தினசபாபதி “தமிழ்” என்ற (மர்க்சிசக் கருத்துடன் ஒவ்வாத “வகுப்புவாத” கருத்துக்கு) போலித்தனத்துக்கு தமிழ் வாலிபர்களை இட்டு சென்றவர்.

    இவருக்கு என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் இவருக்கு அந்தநாள்களில் பணம் வழங்கி தமிழர்களை பாலஸ்தீனம் வரை அனுப்பியவர்கள் கோடிக் கணக்கில் சம்பாதிதுள்ளனர்.

    இறுதியில் தமிழர்கள் வெறும் பஞ்சப் பரதேசிகளாக்கப்பட்டுள்ளனர். பட்டுக்கு ஆசைப்பட்டு கோவணமும் போன கதைதான்!

    இந்த நிலைமைக்குக் பெயர் “மார்க்சிச” வழிப் போராட்டம் அல்ல! இந்த இரத்தினசபாபதி கும்பலுடன் ஒத்துப் போகாத தமிழ் மார்க்சிஸ்டுகள் அனைவரும் புலிகளினாலும் மற்றைய கோஷ்டிகளாலும் தேடி அழிக்கப்பட்டனர். அதாவது தாங்கள் கதைக்கும் “லண்டன்” மார்க்சிசத்துக்கு இலங்கையிலுள்ள மார்க்சிஸ்டுகளிடமிருந்து எந்த வித விமர்சனங்களும் வந்து தங்களின் “ஈழனாசம்” பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அக்கறையாக இருந்தனர்.

    இந்த இரத்தினசபாபதியை “மார்க்ஸிஸ்ட்” என்பதே பெருத்த அவமானம்!

    Reply
  • நந்தா
    நந்தா

    Aaivu on September 30, 2010 8:09 am

    Better read the book “By way of Deception” by a Mossad agent. The stunning fact is the training costs too paid by J.R.J government. The latest HONEY-MOON of LTTE and UNP proved it further!

    EELAM was not created in Sri Lanka but imported from London!

    Ratnasabaapathy and others were hired and paid by the same Capitalist elements.

    cheap siththanantha on September 30, 2010 7:39 am

    Dont you know the contribution of Ratnasabaapathy?
    “mullivaaykkaal”. Get it?

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    அபிமன்யு

    இன்று EPRLF (both) சரி ENDLF சரி ரட்ணாவின் தத்துவத்தை துக்கி பிடிப்பது எதை காட்டுகின்றது என்றால் அப்போதும் சரி இப்போதும் சரி அவர்கள் பிரிந்து போனதில் எந்தவித நியாயமும் இல்லை என்பது தான்.

    மேலும் இந்திய படை காலத்தில் EROS போட்டு தள்ளியதுக்கு இப்போது என்ன விளக்கம் சொல்கிறார்கள். அதை ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ.

    அவர்களிடம் சொல்ல எதுவும் இல்லாத போது பளையனவற்றை துக்கிபிடிகின்றார்கள் எனெனில் இரத்தின தான் இல்லையெ பாவம் அவர்கள் தமது வெறுமையை காட்டிவிட்டர்கள் இவர்கள்தன் எமது தலைவர்கள்.

    Reply
  • Aaivu
    Aaivu

    Nantha, in your reply the very first sentence read as
    “Better read the book “By way of Deception” by a Mossad agent”

    That is the reason and with some other facts I said that is politically motivated lie.

    Further, you stated as
    “The stunning fact is the training costs too paid by J.R.J government” It is more than enough to prove my case. I don’t need to do further discourse analysis on your statements based on the above facts i.e., the conclusion is trivial fact.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    நந்தா you don’t get it do you?

    Whole sale failure of the Sinhala leftists, Marxists, Maoist, JVP and other armchair revolutionaries to convince the majority people to renounce majoritarian nationalism created the condition for the emergence of LTTE EROS TELO and other 30 or so groups in order to fill the political vacuum.

    The best thing one could do is to review why Shanmugathasan, Pieter Kenaman, N M Perera, Colvin failed to convince the people in order to establish a “utopian” workers’ paradise in Sri Lanka given that they have had more than 60 years of history behind their parties.

    You are confused therefore I urge you to stop throwing Marxist Maoist mud against everyone in this forum and join rest of the real people who struggle to live another day.

    It was LTTE which led to the Mullivaaikkal and not EROS. As a puritanical Marxist Maoist with Mao given magical powers why didn’t you stop LTTE and its leaders were being massacred by the Sri Lankan security forces?

    You should have gone to Sri Lanka with Das Capital and Red Book and read out few pages from both books which might have stopped the slaughter of the people as the Sinhala army would have realised they too were part of the proletarian as per Nanda’s Maoism.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஆய்வு:
    மொசாட் ஏஜன்டினால் எழுதப்பட்ட புத்தகத்தில் வந்தவற்றை இரத்தினசபாபதியோ, புலிகளோ எந்தக் காலத்திலும் மறுத்து எழுதியது கிடையாது. அந்தப் புத்தகம் புலிகளும், இரத்தினசபாபதியும் உயிரோடு இருந்த காலத்தில் வெளியிடப்பட்டது.

    மொசாட் காரனுக்கும், கனடிய எழுத்தாலர் கிளையர் கொய்க்கும் “புலிகளை” வம்புக்கிழுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது.

    So, you can cry and tell “that is lie” or “this is lie” but the people concerned keep silence.

    Cheating Tamil people and serving former Masters are not Socialism or any damn ideology!

    சித்தானந்தன்:
    புலிகளும், ஈரோசும் இறுதிவரை முள்ளி வாய்க்காலில் கைகோர்த்தபடியேதான் கட்டையேறினார்கள்.

    உங்களுக்கு நடந்த விபரங்கள் தெரியவில்லைப் போலிருக்கிறது!

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    நந்தா You have a short and selective memory.

    LTTE banned EROS in 1990 just after IPKF left Sri Lanka. Majority of the EROS members either left Sri Lanka or kept low profile.

    A few former EROS members joined LTTE not out of love for Prabaharan but were forced into accepting their dominance. Those who joined the LTTE numbered a few and became LTTE members.

    The former EROS members whoever that may be were part and partial of LTTE structure and not part of EROS. You don’t have to be a rocket scientist to understand this simple logic. You could not be part of LTTE if you were a committed EROS cadre. Therefore those who died in Mullivaaikkal were either innocent civilians or LTTE members and their supporters.

    There are millions of other important matters to discuss which may be mutually beneficial to all of us rather than dwelling in trivia. I suggest you read the following which may help you to broaden your horizon:

    siteresources.worldbank.org/INTARD/Resources/ESW_Sept7_final_final.pdf
    ifad.org/pub/land/land_grab.pdf
    scribd.com/doc/38400589/Book-on-13th-Amendment-English
    isria.com/
    atimes.com/atimes/South_Asia/LI29Df01.html
    atimes.com/atimes/China/LI29Ad01.html
    epw.in/epw/uploads/articles/15141.pdf
    epw.in/epw/uploads/articles/15134.pdf
    epw.in/epw/uploads/articles/15174.pdf
    epw.in/epw/uploads/articles/15207.pdf
    srilankaguardian.org/2010/09/fa-hsien-in-sri-lanka.html
    hurriyetdailynews.com/n.php?n=seal-of-8000-years-unearthed-in–2010-09-20
    ebc.ee/EVOLUTSIOON/publications/Kivisild2000.pdf
    sundaytimes.lk/100711/News/nws_30.html
    sundaytimes.lk/100711/News/nws_31.html

    Reply
  • Aaivu
    Aaivu

    Dear Nantha,
    You are not in the position to accept the truth and actually you trying to cheat others with your useless arguments. You clearly stated that

    “மொசாட் காரனுக்கும், கனடிய எழுத்தாலர் கிளையர் கொய்க்கும் “புலிகளை” வம்புக்கிழுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது”

    As everybody know that the duty of a Mossad Officer is to do such things (during the period of .J.R Govt Mosad was assigned in counter insergency operations in Sri Lanka) and your arguments are entirely based on their statements. If you are geniune you should have validated their statements since their backgroud is as such. So that, it is clear from the manner you are trying cheat others as you may have been hired by somebody else as Mossad.

    Reply
  • jeyarajah
    jeyarajah

    இன்று வெளிநாட்டில் இருக்கிற பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் மது அருந்துவதில் மற்றைய நாட்டவர்களுடன் போட்டி போடக் கூடியவர்கள். நண்பர்கள் ஒன்று கூடினாலும் இலக்கியச் சந்திப்பு கலியாண வீடு செத்தவீடு இது எதுவாயினும் காருக்குள் போத்தல் உருளுவது சாதாரணம். அன்று சாரத்துடன் தாடி வளர்த்து பிளெய்ன் ரீயும் சிகரட்டும் என்றுதான் இருந்தார்கள். பின்பு வசதிவர எதை அடித்தார்கள் என்று யாவருக்கும் தெரியும். மார்க்சிசம் கதைக்காத வித்துவாங்கள் அதிலும் ஒரு படி மேல். தளபதிகள் குனிஞ்சால் நிமிர முடியாத வண்டியும் தொந்தியும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு கருணா நல்லதொரு உதாரணம். எனவே ரட்னசபாபதிக்கு மட்டும் குடிகாரப்பட்டம் சூட்டுவது சரியாகப் படவில்லை.

    Reply
  • Arun
    Arun

    ரட்ணாவின் அரசியலை ஈரோஸ் சரியாக புரிந்து கொள்ளவில்லை இதனால் தான் பத்மநாபா ஈரோஸை விட்டு வெளியேறினார் இதனால் தான் புலிகளுடன் ஈரோஸ் இணைந்தனர் இதனால்தான் ஈரோஸ் இன்று இல்லாமல் போய்விட்டது இதனால் இனிமெல் ரட்ணாவின் தத்துவம் தேவைப்படாது எனவே நேரத்தை வீணாக செலவிட வேண்டாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    Aaivu on October 1, 2010 5:09 pm

    “Cheating”
    That is the main profession of the so called “Tamil Liberators”.

    You never come across the book I mentioned. You have no guts to deny the matters in the book!

    But you think that it is easy to “tell” everything lie.

    Come back after reading the book and explain who were the Tamils trained by Mossad in Tel Aviv while SL army also trained at the same time in Tel Aviv!

    Reply
  • நந்தா
    நந்தா

    சித்தானந்தன்:
    அன்டன் பாலசிஙமும், இரத்தின சபாபதியும் “ஒரு கோப்பயில்” குடியிருந்த மக்கள் மாத்திரமல்ல ஈரோசின் நிறுவனர்களும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஈரோஸ் இயக்கம் இலங்கையில் புலியின் நிழலாகவே இருந்தது.

    ஈரோசிலிருந்து ஓடியவர்கள் சில வேளைகளில் “உண்மைகள்” தெரிந்தவர்களாகவும் இருக்கக் கூடும்!

    ஈரோசின் தலைவர் பாலகுமாரன் பிரபாகரனின் (கொ.ப.செ = கொள்கை பரப்பு செயலாளர்) ஆகியதும் இறுதிவரை புலிகளோடு இருந்து மண்டையை போட்டதும் ” நிர்ப்பந்தம்” என்று சொல்லி தமாஷ் பண்ண வேண்டாம்.

    11,000 புலிகள் சரணடைந்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூரவும்! அது எப்படி என்றும் அறிந்து கொள்ளவும்!

    Reply
  • BC
    BC

    எப்போதும் தண்ணியுடன் இருக்கும் ரட்னசபாபதியோடு இடைகிடை தண்ணி பாவித்த தளபதிகள் என்று புலிகலால் சொல்லப்பட்டவர்களோடு ஒப்பிடுவது பொருத்தமாக தெரியவில்லை. மற்றும் ஒருசில ஏமாந்தவர்களை தவிர யார் இப்போ இந்த தளபதிகளை பெரிதாக நினைக்கிறார்கள்?இவ்வளவும் ரட்னசபாபதி தமிழ் மக்களுக்கு வழி காட்டினார், அப்படி அறிவுரை சொன்னார் என்றபடியால் தான் வந்தது. மற்றும்படி ரட்னசபாபதி தினமும் மதுவோடு இருந்தால் எங்களுக்கு என்ன பிரச்சனை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இவ்வளவும் ரட்னசபாபதி தமிழ் மக்களுக்கு வழி காட்டினார், அப்படி அறிவுரை சொன்னார் என்றபடியால் தான் வந்தது. மற்றும்படி ரட்னசபாபதி தினமும் மதுவோடு இருந்தால் எங்களுக்கு என்ன பிரச்சனை//
    இதுவே என் நிலையும்;

    Reply
  • அபிமன்யு
    அபிமன்யு

    //…”ஆக மதுவில் தொடங்கியதுதானா ஈழ போராட்டம்? குடித்து விட்டு குடும்பத்தையே கவனிக்கமுடியாது இதில் நாட்டை பிரித்து ஆழ புறப்பட்டது தப்புதானே?”// //ஓரு குடும்பத்தை பார்க்க முடியாத ஒருவர் எப்படி ஒரு சமூகத்தை பார்க்கவோ அல்லது சீர் திருத்தவோ முடியும்?”//—பல்லி
    மறுபடியும், மறுபடியும் தனிமனித வசவுகள் பாடியே தீருவேன் என்பதில் பல்லி பிடியாக இருக்கிறார்!

    ஒருவர் சைவ உணவு உண்பதும், அசைவ உணவு உண்பதும் அவரவர் தெரிவுபோல், ஒருவர் மது அருந்துவதும், மது அருந்தாமல் இருப்பதும் அவரவர் தெரிவு—அவை அவரது பொதுவாழ்வின் செயல்களைப் பாரதூரமாகப் பாதிக்காத வரை. பல்லிக்கு விரக்தி இருக்கலாம், கசப்புணர்ச்சி இருக்கலாம். அதற்காக இப்படியா ஒரு மனிதனின் அரசியல் பங்களிப்பையும், ஈழப்போராட்டத்தையும் ஒரேயடியாக கொச்சைப்படுத்துவது?

    ரட்ணா தனது இளவயதிலேயே ஈழ அரசியலில் முழுநேரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதனால் அவரால் குடும்பத்தைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், “குடித்து விட்டு குடும்பத்தையே கவனிக்க முடியாதிருந்தார்” என்ற அடம்; “குடும்பத்தையே கவனிக்கமுடியாதவர் நாட்டை பிரித்து ஆளப் புறப்பட்டது தப்புதானே” என்று குதர்க்கம் வேறு!

    பொதுவாழ்வில் ஈடுபட்டதன் காரணமாக தங்களது குடும்ப வாழ்க்கையில் அக்கறை செலுத்தாதிருந்தவர்கள் அரசியல் சரித்திரத்தில் புதிதல்லவே! அரசியல் மூலம் பணம் திரட்டி தங்கள் குடும்பங்களை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வசதியாக வாழவைத்துக்கொண்டு ஏமாற்று அரசியல் நாடாத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்தான் நாட்டை ஆளப் புறப்பட வேண்டியவர்களா? அல்லது நாட்டை ஆளும் தகுதி கொண்டவர்களா?

    //”தனிமனித புகழ் பாடும்போது அவரது குறைகள் சொல்லப்படாதா”// —பல்லி
    ஒருவரது அரசியல் கோட்பாடுகள், பங்களிப்புகள் பற்றிப் பேசும்போது அவரது தனிப்பட்ட குறைகளைத் தூக்கிப் பிடிப்பது ஆரோக்கியமான வாதமல்ல.

    //”அதன் மகிமைகளை தேசத்தில் ஒரு கட்டுரையாக எழுதுங்கள். வருங்கால சந்ததிகளுக்கு மது எதுக்காக என தெரியட்டும்”//–பல்லி
    மதுவிலக்கு அல்லது மது அருந்துவதின் நன்மை தீமைகள் சம்பந்தமான கட்டுரையொன்று தேசத்தில் பிரசுரிக்கப்படும்போது பார்க்கலாம்.

    //”இதை (ரட்ணா மற்றும் பலரைப்போல் ஈழ அரசியலில் ஈடுபட்டதன் மூலம் பணம் சேர்க்கவில்லை, சொகுசு வாழ்க்கை வாழவில்லை, பணத்தை மற்றவர்களிடம் பெற்று வாழ வேண்டிய தூரதிருஷ்டத்திற்கும் அவர் ஆளாகியிருந்தார்) சொல்வதில் உங்ளுக்கு பெருமை. ஆனால் எமக்கு வெக்கமாக உள்ளது, ஈழத்தமிழனின் கல்வியறிவு இப்படி அலைபாயுதே என//—-பல்லி

    அரசியலில், பொதுவாழ்க்கையில், முழுநேர வேலையாக ஈடுபடுபவர்கள் பலர், தங்கள் நண்பர்களிடமோ, அனுதாபிகளுடமோ, நலன்விரும்பிகளுடனோ, செயற்பாடுகளுடன் ஒத்திசைவு கொண்டவர்களிடமோ, பணம் பெறுவதும் ஒன்றும் புதிய விடயமல்லவே!

    //”இதில் தமிழ்மக்களின் முன்னெப்பொழுதுமில்லாத அழிவுகளுக்கு இவரது பங்கு என்ன என்பதே இன்றய வாதம்”//—பல்லி
    எனது பின்னோட்டங்களை மறுபடியும் நிதானமாகப் படித்துப் பார்த்தால் பதில் பெறலாம் என்றாலும், மறுபடியும் குறிப்பிடுகிறேன்:–

    ஒரு பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நல்லதோர் இடத்தை நோக்கி, அந்த இடத்தை அடைவதற்கு இதுதான் உகந்த பாதை எனக் கணித்து அந்தப் பாதையில் பஸ்ஸை ஓட்டிச் செல்ல நீங்கள் முனைகிறீர்கள். வேறவர் உங்களைப் பலாத்காரமாகத் தள்ளிவிட்டு அந்த பஸ்ஸை கடத்திக்கொண்டு முரட்டுத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் வேறொரு பாதையில் வேகமாகச் செலுத்துகிறார்கள். நீங்கள் கத்துகிறீர்கள்: “ஐயோ! அந்தப் பாதை வேண்டாம்” என்று. பயணிகளோ பஸ்ஸைக் கடத்தியவர்கள் எப்படியாவது அவர்களை அந்த நல்லதோர் இடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பஸ்ஸில் தொடர்ந்து பயணிக்கின்றனர். ஆனால் பஸ்ஸைக் கடத்தியவர்களோ, பஸ்ஸையும் பயணிகளையும் அதல பாதாளத்தில் மீளமுடியாதவாறு வீழ்த்தி விடுகிறார்கள். அப்படி நடக்கும்போது, நல்ல நோக்குடன், நல்ல சிந்தனையுடன் பஸ் பயணத்திற்கு அடிகோலிய உங்களையோ பயணத்தையோ குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கறது?

    //”மார்க்சிசம் எந்தக் காலத்திலும் “மொழி” அடிப்படையில் ஆயுதப் போராட்டம் பற்றி உபதேசிக்கவில்லை. “மக்களை அணிதிரட்டல்” என்ற மார்க்சினதும் மாவோவினதும் பாலபாடத்தைக் கூட தொட்டுப் பார்க்காத இரத்தினசபாபதி “தமிழ்” என்ற (மர்க்சிசக் கருத்துடன் ஒவ்வாத “வகுப்புவாத” கருத்துக்கு) போலித்தனத்துக்கு தமிழ் வாலிபர்களை இட்டு சென்றவர்”//—நந்தா.

    ரட்ணாவின் ஒரு கட்டுரையாவது நந்தா வாசித்திருக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! ரட்ணா “மொழி” அடிப்படையிலான ஈழப் போராட்டத்தை நிராகரித்தவர். அது மட்டுமல்ல, ஈழப் போராட்டம் தமிழர்களின் வெறும் மொழிப் போராட்டமோ, உரிமைப் போராட்டமோ அல்ல, உடைமைப் போராட்டம் என்ற தர்க்கீகத்தின் அடிப்படையில் தன் அரசியல் கோட்பாடுகளை முன்வைத்தவர். அவற்றினை இங்கு விரிவாக விபரிக்க முடியாது என்பதாலும், விபரித்தாலும், காழ்ப்புணர்ச்சி, கர்வம், நிதானமாகப் பார்க்காமலும் படிக்காமலும் “எல்லாம் எனக்குத் தெரியும், இனித் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை” என்ற வரட்டுக் கௌரவம் கொணடவர்களுக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை என்ற உணர்வினாலும் இதனை மேலும் விளக்குவதை இத்தோடு விட்டுவிடுகிறேன்.

    //”இவருக்கு என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் இவருக்கு அந்த நாள்களில் பணம் வழங்கி தமிழர்களை பாலஸ்தீனம் வரை அனுப்பியவர்கள் கோடிக் கணக்கில் சம்பாதித்துள்ளனர்”//—நந்தா.

    அப்படிக் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் யாரென்று சொல்லாமலே, அதற்கான எதுவித ஆதாரங்களையும் முன்வைக்காமலே, போகிறவாக்கில் எழுந்தமானமாகத் துப்பிவிட்டுப் போகவேண்டியதுதானே!. சரியோ, தவறோ, அக்கால கட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும், அனுதாபிகளும், ஆதரவாளர்களும் பட்ட பணக் கஷ்டங்கள் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

    //”இன்று EPRLF (both) சரி ENDLF சரி ரட்ணாவின் தத்துவத்தை துக்கி பிடிப்பது எதை காட்டுகின்றது என்றால் அப்போதும் சரி இப்போதும் சரி அவர்கள் பிரிந்து போனதில் எந்தவித நியாயமும் இல்லை என்பது தான்.”//.–அப்பாவி

    பிரிந்து போனதற்கான காரணம், அமைப்பு சார்ந்தது, செயற்பாடுகள் சம்பந்தமானது, ரட்ணாவின் அரசியல் நிலைப்பாடு காரணம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டும், அதில் நியாயம் இல்லை என்று நீங்கள் அடம்பிடித்தால், அதற்கு என்ன பதிலைக் கூறமுடியும்?.

    //”மேலும் இந்திய படை காலத்தில் EROS போட்டு தள்ளியதுக்கு இப்போது என்ன விளக்கம் சொல்கிறார்கள். அதை ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ”//–அப்பாவி
    “இந்திய படை காலத்தில் EROS போட்டு தள்ளியதுக்கு….” –அப்பாவி என்னத்தைக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை.!— புரியாதை எப்படிக் கேட்கிறது? சம்பந்தப்பட்டவர்கள் என அவர் கருதுபவர்களிடமே கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளட்டும்.

    முடிவாக, இங்கு எழுதப்படும் பல பின்னோட்டங்கள், ரட்ணாவின் ஈழ அரசியலைப் பற்றியும் அவரது பங்களிப்பு பற்றியும் ஆக்கபூர்வமாக விமர்சிக்காமல், தரமற்ற வகையில் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றியே எழுதுவதிலேயே அதிக அக்கறை செலுத்தப்படுகிறது, காழ்ப்பணர்ச்சியும், தனிமனித வசையுமே மேலோங்கி நிற்பதாக என் சிற்றறிவுக்குப் படுவதாலும், “பெறுநர்களின் தராதரம் அறியாமல் முத்துக்களை வீசுவது அறிவுடமையாகாது” என்ற அறிஞர்களது அறிவுறுத்தலை நினைவில் நிறுத்தி, இத்துடன் இது விடயமாக ஒதுங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    நந்தா

    “அன்டன் பாலசிஙமும், இரத்தின சபாபதியும் “ஒரு கோப்பயில்” குடியிருந்த மக்கள் மாத்திரமல்ல ஈரோசின் நிறுவனர்களும் என்பது எல்லோருக்கும் தெரியும்”

    This is a news to me. What has Balasingam got to do with EROS. Are you saying that Blasingam was a co founder of EROS. Are you out of your mind? As far as I know both didn’t share their glasses.

    “ஈரோஸ் இயக்கம் இலங்கையில் புலியின் நிழலாகவே இருந்தது”.
    That is how they managed to survive.

    “ஈரோசிலிருந்து ஓடியவர்கள் சில வேளைகளில் “உண்மைகள்” தெரிந்தவர்களாகவும் இருக்கக் கூடும்!”
    Perhaps they were not that stupid to join the LTTE.

    இறுதிவரை புலிகளோடு இருந்து மண்டையை போட்டதும் ” நிர்ப்பந்தம்” என்று சொல்லி தமாஷ் பண்ண வேண்டாம்
    Did Blakumar tell you the secret as to why he joined LTTE? Why don’t you share the secret with us? There is nothing to joke about. The only joke I really enjoy is your unlimted capacity to spin yarn. I admire your ability of creative writing.

    “ஈரோசின் தலைவர் பாலகுமாரன்”
    As far as I know Balakumaran was not a leader for EROS never had a leader. It was founder Ratna and rest of them were Thozlarkal (comrades).

    “11,000 புலிகள் சரணடைந்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூரவும்! அது எப்படி என்றும் அறிந்து கொள்ளவும்”

    Was it Ratna who persuaded them to surrender to the Sri Lankan forces?

    Perhaps it is plausible with your immagination that Ratna could have betrayed them from his grave many years after his death.

    It is also possible that Ratna betrayed Trostky, Che, Subase Chandrabose, Kuttimani, Thangathurai, Pathmanaba, Sri Saba, Prabaharan …………………….. Ganthi, Nelson Mandela and all those people killed in tragic circumstances.

    Your ignorance has no bounds or is it paranoia?

    Reply
  • நந்தா
    நந்தா

    சீப் சித்தானந்தன்:
    நீங்கள் முதலில் தமிழில் எழுத ஒரு சில மணிநேரத்தை செலவு செய்யுங்கள். பின்னர் உங்கள் தர்மநியாயங்களை எடுத்து விடுங்கள். அதனால் பலர் பயனடைவார்கள்.

    தமிழுக்காக ஒரு சில மணிநேரம் செலவு செய்ய விருப்பம் இல்லாதவர்கள் “தமிழர்களின்” பிரச்சனை பற்றி சண்டப் பிரசண்டம் செய்து ஊரை ஏமாற்ற வேண்டாம்!

    Reply
  • நந்தா
    நந்தா

    “ஈழம்” என்பதே இனவாதத்தின் குறியீடு என்பது இன்னமும் புரியாமல் இரத்தின சபாபதி “மார்க்சிசம்” பேசினார். கட்டுரை எழுதினார் என்றும் பிரிவினைக்கு எதிரானவர் என்றும் காது குத்தவேண்டாம்!

    ஈழம் என்று ஈரோஸில் இருப்பதை “முழு இலங்கைக்கும்” சேர்த்துதான் சொன்னார் என்று புதுக் கரடிகள் இனி வெளி வரலாம்.

    இரத்தினசபாபதியின் “மதுப்பழக்கம், மார்க்சிசம் இரண்டும் வெளினாட்டு ஆயுத வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டன.

    லண்டனில் தொடக்கப்பட்ட ஈரோஸ் இயக்கத்தின் தாபகர்கள் யாரென்று இன்னமும் தெரியாது சிலர் இருந்து கொண்டு வரலாறுகள் பற்றி ஜமாய்க்கிறார்கள்.

    Reply
  • Kanthan
    Kanthan

    நந்தா on October 1, 2010 9:01 pm,
    As I know the book and the background very well I state without any doubt, that is a highly politically motivated lie.

    I don’t want to discuss further since it is an open forum.

    Reply
  • நந்தா
    நந்தா

    kanthan:
    Can you tell the so called “motivation” of the Authors of the book?

    I ask you to tell them because this is an open forum! No point in crying “it is lie or that is lie”.

    Reply