நுவரெலிய – வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா – வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா – வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்களில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப்பாதையில் முன்னெச்சரிக்கையோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டயொன்று குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *