கிளி – முல்லை இல் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சென்று பணிபுரிவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றாக இல்லாவிடினும் ஓரளவிற்கு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் ஏ-9 பாதையூடாக பயணம் செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அம்முறை தளர்த்தப்பட்டு அனுமதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது என யாழ.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி. கேசவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலுள்ளது எனவும், கிளிநொச்சி முலலைத்தீவு மாவட்டங்களில் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும், அங்கு பணியாற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் அமைய செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *