வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்தலில் இணைத்துக் கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை.

இலங்கையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆயிரம் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வடக்கில் 120 பாடசாலைகளை அதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் கிராமப்புற பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றை நவீன முறையில் புனரமைத்து தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின் நிலையில், வடக்கில் 90 பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 120 பாடசாலைகளை இதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சிடம் கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்தும் திட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் விபரம் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *