யாழ்.வந்துள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் தொழில் வாய்ப்பு தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிதை நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் நேற்று திங்கள்கிழமை யாழ். போதனா வைத்திசாலைக்குச் சென்று தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒரு குழுவினர் மல்காந்தி என்பவர் தலைமையில் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி அவர்களைச் சந்தித்து தங்கள் பெயர் விபரங்கள், கல்விச்சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டி தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியினை சுகாதார அமைச்சுத்தான் மேற்கொள்ளும் என வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்ததாகவும் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *